DiscoverKaruvachi Kaviyam : கருவாச்சி காவியம்
Karuvachi Kaviyam : கருவாச்சி காவியம்
Claim Ownership

Karuvachi Kaviyam : கருவாச்சி காவியம்

Author: M Visalatchi

Subscribed: 3Played: 15
Share

Description

கருவாச்சி காவியம்
42 Episodes
Reverse
....... வந்து நிக்கிறா கட்டையன் வீட்டு வாசல்ல. அவ வாக்கப்பட்ட வீடு; இத்துனூண்டு வாழ்ந்த வீடு; அவ கன்னி கழிஞ்ச வீடு; அவ கர்ப்பத்துக்குள்ள காறித் துப்புன வீடு .
முப்பத்தேழு வருஷத்துக்கப்புறம் வாக்கப்பட்ட வீடு தேடி எட்டு வச்சு போறா........ இன்னைக்கு என்னமோ நடக்கப் போகுது இந்த பூமியிலன்னு மேகச் சந்து வழி உத்து உத்து பாக்குது ஓரம் தேஞ்சு ஒச்சமாகிப்போன உச்சி நெலா.
பாவிப்பய 'அய்யோ' ன்னு சொல்ல வந்தானோ? 'அய்யக் கா'ன்னு சொல்ல வந்தானோ?
"நீயாடா எம் பிள்ள? எம் பிள்ள நீயாடா? ஒன்னிய பாக்காம நான் செத்திருக்கணுமடா; இல்ல நான் வருமுன்னே நீ செத்திருக்கணுமடா" - கருக்குழியில தீப்புடிக்க கத்துறா கருவாச்சி.
"பெத்த அப்பன் செத்துக் கெடக்கான். கதவை சாத்திட்டு படுத்துக்கெடக்கானே கட்டையன் . கூப்பிடுங்கப்பா அவன."...........
"ஏண்டா ராசா இப்படி பண்ணின? என்னடா குறை வச்சேன் ஒனக்கு? ஒம் மேல என் சுண்டு விரல் பட்டிருக்குமா? ஒரு சுடுசொல் சொல்லி இருப்பனா? புழுக்கச் சோளம் வாங்கி நான் கஞ்சி காய்ச்சிகிட்டு ஒனக்கு அரிசி வாங்கி ஆக்கிப்போடலையா? களையெடுக்கப் போயி செம்புழுதியில பெரண்ட சீலய நான் கட்டிகிட்டு ஒந் துணிய வெள்ளாவிக்கு போட்டு வெளுத்து வாங்கி வைக்கலையா?...... களையெடுக்க போனாலும் உன் கிட்ட சொல்லிட்டு போவேனடா... நீ கல்யாணம் முடிச்சதையே சொல்லாம போயிட்டி யேடா."
"உனக்குத் தெரியாத ஒரு கதையும் சொல்லட்டுமா?".... பதறிப்போன கருவாச்சி "என்ன கதையடி ஆத்தா?".... "அழகு சிங்கம் பொண்டாட்டி இப்ப முழுகாம இருக்கா"......
............ அடைக்குது கருவாச்சி கதவு ; அரவமில்லாம கமுக்கமா தொறக்குது திம்சோட கடந்தகால கதவு........
சிங்கத்தையே கழுதையா மாத்துனவளுக்கு நரிய நாயா மாத்த எம்புட்டு நேரம் ஆகும்?...... மாத்திப்புட்டா: தன் சவுரிமுடிங்கிற சாட்டை யில சும்மா பம்பரமா சுத்தி சுழட்டி விட்டுட்டா கட்டையன.
ஏண்டா தங்கம் ஏதுடா உனக்கு துட்டு? " அங்கிட்டு பார்த்துகிட்டே சொன்னான் அழகு சிங்கம்- "நல்லத்தா குடுத்துச்சு" "நல்லத்தானா...?". "அதான்.... திம்சு ". புழுதியில கிடந்த ஒரு முள்ளு சுருக்குன்னு கால்ல குத்த, அவன் சொன்ன சொல்லு நறுக்குனு நெஞ்சுல குத்த, ரெண்டு வலியில எந்த வலி பெருங்கொண்ட வலின்னு தெரியாம நிண்ட இடத்தில நின்டு போனா கருவாச்சி, ஒத்த காலம் மட்டும் ஒசக்க தூக்கி.
"நல்லபாம்பு வெரட்னா மட்டும் நேரா ஓடப்படாதடி, வளஞ்சு வளஞ்சு ஓடு நாத்தான் தப்பிக்கலாம்". ஆத்தா பெரிய முக்கி எப்பவோ சொன்னது இப்ப நெஞ்சு குழியில வந்து நிக்கிது !
"எங்கப்பா பாத்த எம்பிள்ளைய? " "சொன்னா வருத்தப்படுவே மதனி." "சொல்லப்பா" "அம்புலிப்புத்தூர் ஓடைமேட்டுல" "அம்புலிப்புத்தூரா?"............
திம்சு ...........கட்டையன் கட்டுன புதுப் பொண்டாட்டி...... வெண்ணியில சாச்சுட்டா கெழவன; தண்ணியிலே சாச்சுட்டா புருசன; கண்ணீருல சாச்சுட்டா மகன.
"சடைய தேவரு மகன் கட்டையனுக் குத்தாண்டா மகனே ஒன்னிய ஒங்காத்தா பெத்தா" "அவனுக்குத்தான் எண்ணிய பெத்தேன்னு நீ சொல்ற.... அவனுக்குத் தான் நான் பொறந்தேன்னு அவன் சொல்றானா?" "இன்னைக்கு வரைக்கும் சொல்லல."
'யப்பா சடைய தேவா வம்ச கூர் ஓட பிறந்து வளர்ந்துருக்கிறானப்பா ஒன் பேரன். குடும்பி பிடிக்காம விடமாட்டானப்பா உன் குடும்பத்த. சரிதான்! கரட்டு காட்டுக்கு மொரட்டு மம்பட்டி'
அவன் நெத்தி தடவி, மூஞ்சி தடவி, மாரத் தழுவி, தோளத் தடவி, கைய தடவி கடைசியில பாத்தா- அவன் வலது கையில மோதிரம் இருக்கு; வைரக் கல்லக் காணோம்.
அந்த வைர கல்லு,' அணவு' பத்தாம லொடக்கு லொடக்கு லொடக்கு'னு சத்தம் போட்டுக்கிட்டே போகுது. இது சத்தம் இல்ல சாமி ரெண்டு உசுருக்கு அடிக்கிற 'சங்கு' ன்னு வழியெல்லாம் சொல்லிக்கிட்டே போகுது அந்த 'லொடக்கு லொடக்கு'.
பெத்தெடுத்த நான் வளத்த பெரிய மகன் மண்ணு தள்ள தத்தெடுத்து நான் வளர்த்த தங்க மகன் காங்கலையே புல்லு மனம் மாறலையே! புழுக்கை இன்னும் காயலையே! காயடிச்ச பிள்ளையை போய் நாயடிச்சு தின்னுருச்சே! பெறவின்னு ஒண்ணிருந்தால் பிள்ளையாக நீ வாடா! ஆடாக பிறந்தாலும் அடி வயித்தில் சுமப்பனடா!
"மானங்கெட்ட பயலுகளா சேந்து ஒன்னிய ஊனப்படுத்திட்டாங்களே பூலித்தேவா"- அவ அழித்த ஆடு அழுக, என்னமோ ஏதோன்னு பிள்ளையும் சேர்ந்தழுக, கொன்னவாயனும் கூடவே அழுக பாதி எழவு வீடாகிப்போச்சு கருவாச்சி வீடு.
காமாரம் - பொறாமை காயடித்தல் - ஆண்மையழித்தல்
loading
Comments 
loading