DiscoverKadal Pura | கடல் புறா
Kadal Pura | கடல் புறா
Claim Ownership

Kadal Pura | கடல் புறா

Author: Kadal Pura

Subscribed: 0Played: 2
Share

Description

#KadalPura #History #Facts

Subscribe: https://bit.ly/KadalpuraChannel

உலகில் வரலாறு என்பது ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு நிகழ்வும் ஆவணப்படுத்துவது இல்லை ஆவணப்படுத்துவது அனைத்தையும் எல்லோரும் அடுத்த தலைமுறைக்கு கடத்துவது இல்லை. அதனால் எங்களது முயற்சியாக தமிழின் வரலாறு, தமிழினத்தின் வரலாறு, உலக வரலாறு, உலக அதிசய நிகழ்வுகள், மற்றும் அறிவுசார் காணொளிகள் என அனைத்தையும் உங்களது பார்வைக்கு கொண்டு வருவதற்காக கடல் புறா #KadalPura உழைக்கும்
4 Episodes
Reverse
பொங்கல் பண்டிகையின் ஒவ்வொரு நாட்களும் ஏன் எதற்கு எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?  Pongal Festival  History of Pongal Festival  #Pongal #ThaiPongal #TamilNewYear Subscribe: https://bit.ly/KadalpuraChannel Like & Follow: https://www.facebook.com/KadalPuraChannel
List of Banks founded by Tamils and current state of those banks  தமிழர்களால் நிறுவப்பட்ட வங்கிகளின் பட்டியல் மற்றும் அந்த வங்கிகளின் தற்போதைய நிலை  தமிழர்கள் தொடங்கிய வங்கிகள் எத்தனை?  அதன் நிலைமைகள் என்ன?   #ChettiarBanks #NadarBanks #TamilBanks  உலகத்தை தமது வணிக யுக்தியாலும் தொலைநோக்கு பார்வையாலும் தம் வசம் வைத்திருந்த தமிழர்கள் பின்னாட்களில் துரோகத்தாலும் ஆரியத்தாலும் அனைத்தையும் இழந்தார்கள்.   சுதந்திரத்திற்குப் பிறகு சமூக நீதி, பொதுவுடமை காரணங்களால் மீண்டெழுந்த தமிழர்கள் சிறிதுசிறிதாக தமது சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்பினார்கள்.  வ.உ சிதம்பரனார் போல் பலரும் தமது சுதந்திர இந்தியாவில் அடிமை வணிகத்திற்கு எதிராக வெகுண்டெழுந்தார்கள். வங்கிகள், நிதி நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மொத்த வணிகம், சில்லறை வணிகம், உற்பத்தி, கொள்முதல், புதிய தொழில் அறிமுகங்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி என்று எதையும் விடவில்லை.  ஆங்கிலேயர்களின் அடிமை இந்தியாவிலும் பல தமிழர்கள் தமது வணிகங்களை சிறப்பாக செய்து வந்தார்கள். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஆங்கிலேயர்கள் பொருளாதார ரீதியில் பல பின்னடைவுகள் கண்டார்கள். அவர்களது ஆட்சிகள் பல இடங்களில் ஆட்டம் கண்டது குறிப்பாக இந்தியாவில். எனவே அவர்கள் பின் வாங்குவது குறித்த யோசனையில் ஈடுபட்டார்கள். அந்த வேளையில் அவர்களின் நிறுவனங்களை தமிழர்கள் வாங்க ஆரம்பித்தார்கள். இப்படியாக நமது வணிகம் மேலோங்கியது.  தற்காலத்திலும் பலதரப்பட்ட வாணிப யுக்திகளை கையாண்டு இந்தியாவிற்கு முன்னோடியாக திகழ்ந்தார்கள். ஆனால் இவைகள் பலருக்கு உறுத்தவே எப்படியாவது மீண்டும் தமிழனை அடிமைத்தன வட்டத்துக்குள் நிறுத்திவிட வேலை செய்து கொஞ்சம் கொஞ்சமாக அதை நிறைவேற்றியும் வருகிறார்கள் நம்மை ஆள்பவர்கள்.  ஒவ்வொன்றாக நமது வணிகங்கள் நம்மை விட்டு செல்ல ஆரம்பித்தன குறிப்பாக சில்லறை வணிகங்கள், நிதி நிறுவனங்கள் வங்கிகள் என அனைத்தும். இதில் மிக முக்கியமாக நிதி நிறுவனங்கள் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டும் மீண்டும் புதிதாக தமிழர்களால் தொடங்க முடியாத சூழலும் ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பற்றி இந்த காணொளியில் காண்போம்.  இந்த காணொளியில் நாம் தமிழர்கள் தொடங்கிய வங்கிகள் மற்றும்அதன் தற்போதைய நிலை பற்றி விரிவாக காண்போம்.  Subscribe: https://bit.ly/KadalpuraChannel Like & Follow: https://www.facebook.com/KadalPuraChannel
வரலாற்றில் இன்று தூத்துக்குடி இராமநாதபுரம் பேரழிவை சந்தித்த நாள். (23-11-1956 மற்றும் 23-11-1964)  (தூத்துக்குடி ரயில் மற்றும் இராமேஷ்வரம் ரயில்)   தமிழகத்தில் 1964ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலால் தனுஷ்கோடி நகரம் அழிந்தது மட்டுமில்லை, அன்றைக்கு சென்னை-பாம்பனிலிருந்து தனுஷ்கோடிக்கு சென்ற போர்ட் மெயில் விரைவு ரயில் வண்டியில் பயணித்தவர்கள் ஜலசமாதி அடைந்த வேதனையான செய்திகள் எல்லாம் கேட்க முடிந்தது. இந்த சம்பவம் நடந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.  அதுபோன்று, இதே நாளில் 64 ஆண்டுகளுக்கு முன்னால், 250 உயிர்களை காவு வாங்கிய தூத்துக்குடி ரயில் விபத்து இன்றைக்கு நினைவுக்கு வருகின்றன. இந்த விபத்துக்கு, நானே பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன் என்று அன்றைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி,  பிரதமர் நேரு தடுத்தும், 1956 நவம்பர் காலகட்டத்தில் பதவி விலகினார்.   அரியலூரில் 23-11-1956 அன்று இந்த விபத்து நடந்தது.   #TrainAccident #TamilHistory #TuticorinExpress  -----------------------------------------------------------------------------------------------------  Subscribe: https://bit.ly/KadalpuraChannel -----------------------------------------------------------------------------------------------------  Like & Follow: https://www.facebook.com/KadalPuraChannel -----------------------------------------------------------------------------------------------------
2500 ஆண்டுகளுக்கு முன்னால் சிரியா சென்ற தமிழனின் நானோ தொழில்நுட்பம் #TamilMotivation #DamascusKnife #Keeladi கீழடி முதல் சிரியா வரை 2500 ஆண்டுகால தமிழனின் தொழில்நுட்பம்  தமிழரின் #வீரம், #வரலாறு, #அரசியல் என ஆயிரம் ஆயிரம் ஆதாரங்களை கடந்து வந்திருப்போம், ஆயிரம் ஆயிரம் ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்களை வாசித்திருப்போம், பலநூறு ஆய்வுரைகளை கேட்டிருப்போம்….தமிழரின் #தொழிற்நுட்பம், இன்னும் ஆழமாக தேடப்படாத பக்கங்களின் சில பக்கங்களை தொட்டுச் சென்றாலே ’ பண்டையத் தமிழனின்’ புத்திக் கூர்மையை வியக்கலாம்….  அதில் ஒன்றுதான், உலகமே வியந்த, சிரியா #தலைநகர் #டமாஸ்கஸ் நகரில் கண்டெடுக்கப்பட்ட டமாஸ்கஸ் கத்தி. டமாஸ்கஸ் நகரில் கண்டெடுக்கப்பட்ட கத்தியில் இருக்கும் உலோகக் கலவை, ஐரோப்பிய நாடுகளில் பண்டையக் காலங்களில் உருவாக்கப்பட்ட உலோகக் கலவையில் இருந்து மாறுபட்டவையாக இருந்தது.  #Greece #AlexanderTheGreat #KingPorus #Kodumanal #Gift #RoyalGift #War #கிரேக்கம் #அலெக்சாண்டர் #போரஸ்  Subscribe: https://bit.ly/KadalpuraChannel Like & Follow: https://www.facebook.com/KadalPuraChannel
Comments