Discover
Jail Mathil Thigil - True crime series | Hello Vikatan
Jail Mathil Thigil - True crime series | Hello Vikatan
Author: Hello Vikatan
Subscribed: 2Played: 1Subscribe
Share
© Hello Vikatan
Description
ஜி.ராமச்சந்திரன். தமிழ்நாடு சிறைத் துறையில் 39 ஆண்டுகள் பணியாற்றியவர்; 1967-2006 இடைப்பட்ட காலகட்டத்தில் வார்டன் பதவியில் ஆரம்பித்து டி.ஐ.ஜி வரை ஒன்பது பதவிகளை வகித்து ஓய்வுபெற்றவர். அரசியல் கைதிகள், அறம் காக்கக் கைதானவர்கள், சித்தாந்தத்துக்காகச் சிறைபட்டவர்கள், தாதாக்கள், கூலிப்படையினர், சைக்கோ கில்லர்கள், சொத்துக்காக சொந்தங்களையே கொன்றவர்கள், சாதியக் கொலையாளிகள், சந்தர்ப்ப வசத்தால் கொலையாளி ஆனவர்கள், டைம்பாஸ் அக்யூஸ்ட்டுகள், பிக்பாக்கெட்டுகள், பிளேடு போடுபவர்கள் என பலதரப்பட்ட கைதிகளை சந்தித்தவர்.
11 Episodes
Reverse
In this Eleventh episode of Jail Mathil Thigil (ஜெயில் ...மதில்...திகில்...!), Here Retired DIG G.Ramachandran shares his experience in working in Chennai central prison, the Work process in jail, day to day routine of prisoners, and many more interesting things about Chennai central prison. -Jail Mathil Thigil.
In this Tenth episode of Jail Mathil Thigil (ஜெயில் ...மதில்...திகில்...!), Here Retired DIG G.Ramachandran shares his experience in working in Chennai central prison, the Work process in jail, day to day routine of prisoners, and many more interesting things about Chennai central prison.
-Jail Mathil Thigil
ஒரு சிறைச்சாலை எப்படி இயங்குகிறது, இந்த வேலையை இவர், இவர் செய்வார் என முடிவெடுப்பது யார்? யார் யாருக்கு என்ன பொறுப்பு ? ஜெயில் மதில் திகில் தொடரைத் தவறாமல் கேளுங்கள் ..
சிறை ஒரு தனி உலகம். அந்த உலகத்துக்குள்ளே பண்டமாற்று முறை இன்னும் இருக்கா? எந்த பொருளுக்கு விலை அதிகம்? அதை எப்படி உள்ளே கொண்டு போறாங்க? அதைத் தடுக்க காவல் துறையின் போராட்டம் என்ன?!ஜெயில் மதில் திகில் தொடரைத் தவறாமல் கேளுங்கள் .
விருமாண்டி படத்தில் பார்த்ததைப் போன்ற ஒரு சிறைக் கலவரத்தின் தொடக்கம்! பாக்ஸர் வடிவேலுவின் என்ட்ரி !!! யார் அந்த பாக்ஸர் வடிவேலு? ஏன் அவரது வருகை முக்கியமானதாகிறது? ஜெயில் மதில் திகில் தொடரைத் தவறாமல் கேளுங்கள் .
போர்க்களமான சிறை! உடைக்கப்பட்ட சிறை கதவுகள்! பாக்ஸர் வடிவேலுவை ஜெயிலர் ஜெயக்குமார் அடித்துக் கொன்றுவிட்டார். அவரை சும்மா விடக் கூடாது’ என்று தகவல் பரப்பி கலவரத்தைத் தூண்டினர். சில நிமிடங்கள்தான். சிறைக்குள் பரபரப்பு பற்றிக்கொண்டது. பாக்ஸர் வடிவேலுவின் மரணத்துக்கு நோய் காரணமாக இருந்தாலும், அவருடைய ஆதரவாளர்கள் அனைவரின் கோபமும் ஜெயக்குமார் மீதுதான் திரும்பியிருந்தது. போர்க்களமான சிறையில் அப்படி என்ன நடந்தது? ஜெயில் மதில் திகில் தொடரைத் தவறாமல் கேளுங்கள் .
அது 1967, ஏப்ரல் 3-ம் தேதி. அன்றைய தினம்தான் சிறைக்காவலராக கோவை மத்திய சிறையில் பணியில் அமர்த்தப்பட்டேன். பணியின் முதல் நாளுக்கான உற்சாகம் எனக்குள் இருந்தது ஆனால் சிறைக்குள் நடந்தது என்ன?ஜெயில் மதில் திகில் தொடரை தவறாமல் கேளுங்கள் ..
1995 ஏப்ரல் 27 தமிழக காவல்துறையும் பொதுமக்களையும் பயமுறுத்திக்கொண்டு இருந்த ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்ட நாள். ஒரு இரக்கமற்ற கொலைகாரன் தன் மரணத்தை எப்படி எதிர்கொண்டு இருப்பான்? ஆட்டோ ஷங்கரின் கடைசி நிமிடங்களைப் பகிர்கிறார் ஓய்வு பெற்ற சிறைத்துறை அதிகாரி G.ராமச்சந்திரன்.ஜெயில் மதில் திகில் தொடரை தவறாமல் கேளுங்கள்.
எரிக்கப்பட்ட ஜெயிலர்! முதல்வர் கருணாநிதி அலுவலகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு. கலைஞர் கேட்ட அந்த கேள்வி! பலதரப்பட்ட குற்றவாளிகளை அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலையில் கலவரத்தை கட்டுப்படுத்த என்ன செய்தது காவல்துறை?ஜெயில் மதில் திகில் தொடரைத் தவறாமல் கேளுங்கள் .
ஜி.ராமச்சந்திரன். தமிழ்நாடு சிறைத் துறையில் 39 ஆண்டுகள் பணியாற்றியவர்; 1967-2006 இடைப்பட்ட காலகட்டத்தில் வார்டன் பதவியில் ஆரம்பித்து டி.ஐ.ஜி வரை ஒன்பது பதவிகளை வகித்து ஓய்வுபெற்றவர்; அரசியல் கைதிகள், அறம் காக்கக் கைதானவர்கள், சித்தாந்தத்துக்காகச் சிறைபட்டவர்கள், தாதாக்கள், கூலிப்படையினர், சைக்கோ கில்லர்கள், சொத்துக்காக சொந்தங்களையே கொன்றவர்கள், சாதியக் கொலையாளிகள், சந்தர்ப்ப வசத்தால் கொலையாளி ஆனவர்கள், டைம்பாஸ் அக்யூஸ்ட்டுகள், பிக்பாக்கெட்டுகள், பிளேடு போடுபவர்கள் என பலதரப்பட்ட கைதிகளை சந்தித்தவர். ஒரு இளம் தாயின் சிறைக் கதையை சொல்கிறார்.ஜெயில் மதில் திகில் தொடரைத் தவறாமல் கேளுங்கள் ..














