தைலாபுரம் ரூட் எடுக்கும் திமுக. பனையூருக்கு ரூட் போடும் பாஜக. பாமகவை சுற்றி பட்டாசு. ராமதாசை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு. அன்புமணியிடம் பாஜக போட்ட டீல். இன்னொரு பக்கம், விஜயை க்ளோசாக வாட்ச் பண்ணும் அமித்ஷா. விஜய் குறித்த ரிப்போர்ட்ஸ்கள் டெல்லிக்கு பறந்துள்ளது. அதை வைத்து விஜய்க்கு உதவுங்கள் என அமித்ஷா அசைன்மென்ட். இதில் NDA கூட்டணியில் TVK சேர்ந்தால் ஸ்டாலின் சந்திக்கும் 10 பாதகங்கள். தீபாவளி அரசியல் பட்டாசு
அதிமுக 54 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.1972 அக் 17 -ல், எம்ஜிஆர் ஏன் இந்த கட்சியை தொடங்கினார்? திமுகவிலிருந்து ஏன் நீக்கப்பட்டார்? அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள். அவர்களை தன் ஒற்றைச் சொல்லில் கட்டுப்படுத்திய எம்ஜிஆர். இந்த பாடத்தை விஜய் படிக்க வேண்டும் என்கிறார்கள். சரி தற்போது 54 வது ஆண்டில் அதிமுக எப்படி உள்ளது? திமுகவுக்கு எதிராக அன்று எம்ஜிஆர் தர்மயுத்தம் தொடங்கினார் என்றால் இன்றோ அந்த எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக, யாருக்கு சொந்தம்? என எடப்பாடி,ஓபிஎஸ், சசிகலா என ஆளாளுக்கு தர்ம யுத்தத்தை தொடர்ந்து வருகின்றனர். ஏழெட்டு மாதங்களில் தேர்தல். தங்களை நிரூபிக்க புதிய புதிய வியூகங்களை வகுத்தபடி உள்ளன. அந்த வகையில் மூவரின் அடுத்த கட்ட ஸ்கெட்ச் என்ன? அவர்களின் சபதம் நிறைவேறுமா?
'எடப்பாடி, விஜய் என ஆறு சிக்கல்களால் தவிக்கிறார் மு.க ஸ்டாலின்' என்கிறார்கள். இந்த சிக்கல்களை முறியடிக்க, புதிய வியூகங்களை வகுத்துள்ளார். முக்கியமாக பெண்கள் வாக்குகளை டார்கெட் செய்து புதிய திட்டங்கள், ஈர்க்க்கூடிய வகையிலான பரப்புரை, மிக முக்கியமாக வருகின்ற தேர்தலில் 50 பெண் வேட்பாளர்கள் என லிஸ்ட் தயாரிக்க கட்டளையிட்டுள்ளார் ஸ்டாலின் என்கிறார்கள்.
கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் Vs எதிர்கட்சி தலைவர் எடப்பாடி க. பழனிசாமி இடையே காரசாரமான விவாதம். 'கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது, விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசல் துயரத்துக்கு காரணம்' என்கிற வகையில் விளக்கம் கொடுப்பதாக இருந்தது மு.க ஸ்டாலின் பேச்சு. 'போதிய பாதுகாப்பு தரவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை' என விமர்சித்தார் எடப்பாடி. கரூரில் தொடங்கி கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி என விவாதங்கள் நீண்டது.இன்னொரு பக்கம், 'தவெக கொல்லும். நீதி வெல்லும்' என விஜயை, கடுமையாக அட்டாக் செய்துள்ளது முரசொலி.பாஜகவோடு பிராண்ட் செய்வதன் மூலம், திமுக சிலவற்றை அறுவடை செய்ய நினைக்கின்றனர். விஜய்க்கு ஆதரவான குரலின் மூலம், எடப்பாடி சில லாபக்கணக்குகள் போடுகிறார்.
பீகார் தேர்தலில் வெற்றிபெற அமித் ஷா-நிதிஷ் டீம் Vs ராகுல்- தேஜஸ்வி டீம்க்கிடையே போட்டா போட்டி. மாறி மாறி 8 வியூகங்களை வகுத்துள்ளனர். இன்னொரு பக்கம் தலா 101 தொகுதிகளை, BJP & JD(U) பிரித்துக் கொண்டுள்ளனர். பாஜக-வின் இந்த 'Bihar Formula', எடப்பாடிக்கு பயம் காட்டுகிறதா? Vijay கூட்டணிக்கு வந்தால் வெற்றி நிச்சயம் என நம்பினாலும், இன்னொருபக்கம் தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்துவிடுமோ...அதனால் பெரும்பான்மை கிடைக்காமல் போனால், கூட்டணி ஆட்சியாக அமைந்துவிடுமோ? என்கிற அச்சமும் உள்ளது என்கிறார்கள். எனவே இதை தவிர்க்க புது வியூகங்களை வகுத்து வருகிறார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுகவினர்.
'கரூர் கூட்ட நெரிசல்' சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். அவர்களை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி டீம் கண்காணிக்கும் என உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். இதை கொண்டாடி வருகிறது தவெக. அதே நேரத்தில் சட்டரீதியாக இதை எதிர்கொள்ள வியூகங்களை வகுக்கக் தொடங்கியிருக்கும் திமுக. இன்னொரு பக்கம், தவெகவை, என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது பாஜக. அதீத ஆர்வம் காட்டி வருகிறார் எடப்பாடி. விஜய் வருகையால் மட்டுமே தன் எதிர்காலம் உறுதியாகும் என்றும் நான்கு லாபக் கணக்கு போட்டபடி உள்ளார் ஆனால் இதை உடைக்கும் வகையில் 'விஜய் கூட்டணியில் சேர்ந்தால், பாஜகவை கழட்டி விட்டுவிடுவார்' என புது குண்டை வீசும் டிடிவி தினகரன். பின்னணியில் அவருக்கு ஷாக் கொடுத்த சமாச்சாரங்களும், சமாளிக்க அவர் போடும் லாப கணக்குகளும் உள்ளன.
'மண்டல மாநாடு, 5 லட்சம் இளைஞர்களுக்கு பொறுப்பு' என வேகம் காட்டும் உதயநிதி. அவரின் டிசம்பர் பிளான், அதற்கு பின்னுள்ள அரசியல் காரணங்கள். இன்னொரு பக்கம் எடப்பாடி கையில் எடுத்திருக்கும் ஜெயலலிதா ஃபார்முலா . 2011 மாடலை, 2026 இல் கொண்டு வர திட்டம் இந்த இரண்டு பேருடைய நகர்வுகளுக்கு பின்னாலும் இருப்பது விஜயின் அரசியல். முக்கியமாக விஜயை தொடர்ந்து எதிர்பார்க்கும் எடப்பாடி. அதற்கு பின் உள்ள நான்கு பயங்கள்.
சிபிஐ விசாரணை கேட்டு உச்சநீதிமன்றத்தில் விஜய் தரப்பு மனு. த.நா அரசு நோக்கி, சரமாரி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம், "எடப்பாடி-அண்ணாமலை-விஜய்" என மூன்று அரசியல் எதிரிகள். அவர்களை எதிர்த்து தோற்கடிக்க 'ஆபரேஷன் 39' என புதிய ஒன்றை கையில் எடுத்துள்ளார் செந்தில் பாலாஜி. இன்னும் கூடுதலாக சில டாஸ்குகளையும் கொடுத்துள்ளார் மு.க ஸ்டாலின். வொர்க்அவுட் ஆகுமா கோவை ஸ்கெட்ச்? இந்தப் பக்கம் விஜயை வைத்தும், கரூரை-யொட்டியும் அண்ணாமலை Vs நயினாருக்கு இடையே தொடரும் Cold War.
அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறந்தது. 'கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது' என்கிறார் எடப்பாடி. NDA கூட்டணிக்குள் TVK-வை இணைப்பதற்கான சில அசைன்மெண்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி விஜய் கூட்டணியில் இணைந்தால், எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? என்பது குறித்து PLAN B, PLAN C என ஆலோசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.விஜய் இணைவாரா? இன்னொரு பக்கம், 'கை நம்மை விட்டுப் போகாது' என காங்கிரஸுக்கு செக் வைப்பது போல பேசியுள்ளார் உதயநிதி. என்ன நடக்கிறது? விஜயை வைத்து, காங்கிரஸ் போடும் கணக்கு.
அதிகாரத்தில் 25 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் பிரதமர் மோடி. குஜராத் CM டு இந்திய PM. இந்த 25 ஆண்டில் மோடி சாதித்தவைகள் என்ன? சோதித்தவைகள் என்ன? அவர் ஆட்சியில் Make in India திட்டம், அந்நிய முதலீடுகள் எல்லாம் பாசிட்டிவாக பார்க்கின்றனர் பாஜக-வினர். அதேநேரத்தில் மணிப்பூருக்கு உடனடியாக செல்லாமல் காலம் தாழ்த்தியது, பணமதிப்பிழப்பு தொடங்கி விவசாயிகள் போராட்டம் வரை ஏராளமான நெகட்டிவ்கள் உள்ளது என்கிறார்கள் எதிர்கட்சியினர்.அவரின் 25 ஆண்டுகால ஆட்சியால், இந்தியா வளர்ந்து வருகிறதா...இல்லை வீழ்ச்சியை நோக்கி செல்கிறதா? இந்த 25 ஆண்டு பயணத்தின் விரிவான திறனாய்வு.
பாஜகவின் மேலிட பொறுப்பாளர்கள், எடப்பாடியை அவர் வீட்டில் சந்தித்தனர். 'பலமான கூட்டணி, புதியவர்கள் சேர்க்கை' என சில மெசேஜ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் குறித்தும் உரையாடியதாக தகவல். 'கூட்டணிக்கு, விஜய் வர வேண்டும்' என்கிற எதிர்பார்ப்புகளும் உள்ளது என்கிறார்கள். இன்னொரு பக்கம், மு.க ஸ்டாலினுக்கு, தொடர் தலைவலியாக மாறிக் கொண்டிருக்கிறது தர்மபுரி. அங்கு மாஜி மந்திரி பழனியப்பனிடமிருந்து அரூர் தொகுதியை எடுத்து, எம்.பி மணியிடம் கொடுத்துள்ளது அறிவாலயம். இதற்குப் பின்னணியில் எ.வ வேலு டீம் Vs செந்தில் பாலாஜி டீம் இடையிலான Cold war-ம் காரணம் என்கிறார்கள். நடுவே எம்.ஆர்.கே டீமும் உள்ளது. தர்மபுரி திமுக-வில், என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஏன் மருத்துவர் ராமதாஸ் டீமை எதிர்பார்க்கிறார் மு.க ஸ்டாலின்?
'விஜய் தார்மீக பொறுப்பேற்று இருக்கலாம்... கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ஆளும் திமுக தான் காரணம் என எடப்பாடி பேசுவது தரம் தாழ்ந்த அரசியல். கரூருக்கு குழுவை அனுப்பிய பாஜக,ஏன் தூத்துக்குடிக்கு அனுப்பவில்லை? முதலமைச்சர் மு ).க ஸ்டாலின் பொறுப்புணர்வோடு செயல்பட்டு இருக்கிறார்' என ஒரு பக்கம் NDA கூட்டணி அட்டாக், மறுபக்கம் முதலமைச்சருக்கு பாராட்டுகள். இது டிடிவி தினகரனின் புது அரசியல் கேம். விஜயை வைத்து 'டிசம்பர் அரசியல்' என சில கணக்குப் போட்டபடி இருந்தார் ஆனால் விஜய்யை பாஜக டேக் ஓவர் செய்ய முயற்சிக்க, ஸ்டாலினை பாராட்டி என்டிஏக்கு செக் வைத்துள்ளார் டிடிவி. இன்னொரு பக்கம் ஆர்.என் ரவியை கடுமையாக அட்டாக் செய்துள்ளார் மு.க ஸ்டாலின். இதற்கு பின்னணியில் திமுக Vs பிஜேபிக்கு இடையில் தான் வார், விஜய் மற்றும் எடப்பாடி சீனிலேயே இல்லை என வெளிப்படுத்தும் நுண் அரசியல் உள்ளது. அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவர் ராமதாஸ் நலமோடு இருக்கிறார் என தகவல்
நீதிமன்றம் விஜய்க்கு கண்டனம் தெரிவித்திருந்த வேளையில், இன்னொரு பக்கம் விஜய்க்கு ஆதரவான குரலை வெளிப்படுத்துகிறார் எச். ராஜா. விஜய் தாமதமாக வந்ததில் என்ன தவறு? என கேட்கிறார். அதுதான் மோசமான துயரத்துக்கு முதன்மை காரணமாக அமையவில்லையா? என சமூக ஆர்வலர்களிடமிருந்து கேள்விகள் எதிரொலிக்கிறது. அதே நேரம், இரங்கல் டவீட் , பாஜகவின் எம்பிக்கள் குழு என விஜய்க்கு நேசக்கரம் நீட்டும் பாஜக. இதற்கு பின்னணியில் என்டிஏ கூட்டணியில் விஜய் இணைந்து கொள்ள வேண்டும் என ஒரு டீம் டீல் பேசி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அமித் ஷாவுக்கு சென்ற தனியார் ஏஜென்சிஸ் சர்வே ரிப்போர்ட். அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அதில் நமக்கு என்ன நன்மை, தீமை? என ஆலோசனையில் இறங்கியுள்ள மு.க ஸ்டாலின். இதில் புது ட்விஸ்டாக,Soft Corner அரசியலை வெளிப்படுத்தும் காங்கிரஸ். அதற்குள் இருக்கும் சீட் பேர அரசியல் என கரூர் துயர சம்பவத்துக்கு பின் தமிழ் நாட்டு அரசியல் களத்தில் ஓயாத பரபரப்பு.
RSS தன்னுடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடியுள்ளது. நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிட்டு பாராட்டியுள்ளார் மோடி. அதே நேரத்தில், இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மு.க ஸ்டாலின் , பினராய் விஜயன் போன்றோர் கடும் கண்டனம். இதில் குறிப்பிடதக்க விஷயம், மோகன் பகவத் - மோடி இருவருக்கிடையிலான கோல்டு வார் குறைந்துள்ளது. இவர்களை இணைத்து இருப்பது அடுத்த பயணத்துக்கான 'அஜெண்டா 6'. பாஜக ஆளாத மாநிலங்களையும் கைப்பற்றுவது, கம்யூனிசம் - திராவிடம் அதை அட்டாக் செய்யும் 'ஆபரேஷன் CD' மற்றும் அகண்ட பாரதம் என வியூகம் வகுத்துள்ளனர். இதற்கு பதிலடியாக, ராகுல்-ஸ்டாலின் டீம், இட ஒதுக்கீடு, சமூக நீதி, மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை பரப்புரை, பெரியார் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழா என ஐந்து வகைகளில் திட்டமிட்டுள்ளனர். நூறாண்டு கடந்தும் தொடரும் கொள்கை யுத்தம்.
கலைஞருடன் முரண்பட்டு அதிமுக எனும் ஒரு புதிய கட்சியை உருவாக்கலாம் என, அதற்கு விதை போட்ட நாள் 01 அக், 1972. ஏன் அதிமுக எனும் கட்சி, எம்ஜிஆர்-க்கு தேவைப்பட்டது? 53 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அதிமுக-வின், தற்போதைய நிலை எப்படி உள்ளது? எடப்பாடி காலத்தில் உள்ள பாசிட்டிவ் விஷயம், அவர் சந்திக்கும் நெருக்கடிகளும். தாமரையில் தொடங்கிய கட்சி தாமரையில் கரையும் அபாயத்தையில் உள்ளதா?பிரச்சனைகளும் தீர்வுகளும் என்ன?!
"ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள்" என இரட்டை செக்குகளை வைத்துள்ளது காங்கிரஸ். இந்த நெருக்கடியை சமாளிக்க, புதிய ரூட் எடுக்கும் மு.க ஸ்டாலின். முக்கியமாக 2006 பிளாஷ்பேக் வார்னிங் கொடுக்க, உதயநிதி வைத்து புது பிளானை போட்டுருக்கும் மு.க ஸ்டாலின். எல்லாவற்றையும் கவனிக்கும் விஜய். காங்கிரஸ் கூட்டணி கனியும் என்றும் காத்திருக்கிறார்.
கோவையிலிருந்து தன்னுடைய களையெடுப்பு, ஆக்சன்களை தொடங்கிவிட்டது அறிவாலயம். கார்த்தியை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, செந்தமிழ்ச்செல்வனை நியமித்திருக்கிறது திமுக தலைமை. இதற்குப் பின்னணியில் செந்தில் பாலாஜியின் கேம் உள்ளது என்கிறார்கள். அதேபோல திருநெல்வேலியிலும் சில மாற்றங்கள். திமுகவை வலுப்படுத்தவும், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் இந்த ஆபரேஷனை தொடங்கியுள்ளார் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், நாளை செந்தில் பாலாஜிக்கு எதிராக கரூரில் தன்னுடைய சம்பவத்தை தொடங்குவார் விஜய் என்கிறார்கள் தவெக-வினர். அதே நேரத்தில் நான்கு வாக்கு வங்கிகளை குறி வைத்து தன்னுடைய சுற்றுப்பயணத்தை தீவிரப்படுத்தி வருகிறார். இருந்தாலும் மாவட்ட செயலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது, மாற்றங்களை முன்வைத்து பேசாதது உள்ளிட்ட பலவற்றில் தவறவிடுகிறார் விஜய் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
'அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக' என மெகா கூட்டணிக்கு முயற்சிக்கும் எடப்பாடி. அது இயலாதபட்சத்தில், காங்,தவெக வைத்து Plan B திட்டம் வைத்துள்ளார். ஏனெனில் செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் வைத்து தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது பாஜக.இதற்கேற்ற மாதிரியே 'காங் ,அதிக தொகுதிகளை கேட்கிறது. இதனால் உடையும் திமுக கூட்டணி' என பேச தொடங்கியுள்ளார்.காங் பொறுத்தவரை அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என உறுதியாக உள்ளது. தமிழ்நாடு காங்ஆனால் எடப்பாடியின் கனவு கோட்டை நொறுக்கும் வகையில் 'ராமதாஸ் - அன்புமணி'-க்கு இடையே சண்டை தொடர்கிறது.சட்டமன்ற தலைவர் பதவியில் இருந்து ஜி.கே மணியை நீக்கி அதிரடி காட்டியுள்ள அன்புமணி.சுவாரசியமும., பரபரப்புமாய் பயணிக்கிறது அரசியல் கேம்.
எடப்பாடியை கடுமையாக அட்டாக் செய்யும் டிடிவி. 'டிசம்பரில் நல்ல செய்தி வரும்' என தெரிவித்துள்ளார் டிடிவி. 'தவெக' ரூட் எடுக்கிறாரா? என டெல்லி ஜெர்க். இன்னொரு பக்கம் உதயநிதி ஃபோகஸ் செய்யும் 40 தொகுதிகள். அங்கே முழுமையாக வேலையை தொடங்கிய உதயநிதி டீம். இதனால் முனுமுனுக்கும் சீனியர்கள். இதில் ஒரு நூறு தொகுதிகள் வரை ஸ்டாலினுக்கு தலைவலி கொடுக்கின்றன என உளவுத்துறை ரிப்போர்ட். இன்னொரு பக்கம் , அதிக தொகுதிகளை எதிர்பார்க்கும் கூட்டணி என்பதால் கூடுதல் தலைவலி.
சமீபத்தில் 'அமித் ஷா - எடப்பாடி' சந்திப்பு, டெல்லியில் நிகழ்ந்தது. அங்கு, 'பிரிந்தவர்களை சேர்க்கக்கூடாது' என சில நிபந்தனைகளை எடப்பாடி விதித்தார். 'அப்படியென்றால், NDA கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் நீங்கள் சி.எம் வேட்பாளராக இருக்க முடியாது' என லாக் போட்ட அமித் ஷா என தகவல். இன்னொரு பக்கம், கரூர் முப்பெரும் விழாவில் ஸ்கோர் செய்தாரா மு.க ஸ்டாலின்? ஒரு வகையில் அவருக்கு நன்றி சொல்வார் அமித் ஷா என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.