4. தனிமை | Loneliness
Update: 2020-05-29
Description
தனிமை யாருக்கு
சொந்தமானது?
நாம் பூமியில் ஜனித்த
அக்கணமே
நமக்கு சொந்தமானது.
இந்த தனிமை
நாம் தவழ்ந்து நடக்க
தவித்த போதே நமக்கு சொந்தமானது.
உறவுகளும் உற்ற நண்பர்களும் - நம்
உறக்கத்தை கலைத்தபோதே
நம்மோடு துணையாகிப்போனது.
அன்பிற்காக
பாசபந்த அணைப்புகளுக்காக அலையும்போதே ஆறுதல் அளிப்பதும் தனிமைதான்.
சில போலிகளை உண்மைகளென்று நம்பினதிற்கு காரணமும் - இந்த தனிமைதான்.
உண்மைகளை உணர்ந்து உள்ளமுடைந்து
கண்ணீர்விடும் போதும் துணையானது
இதேதனிமைதான்.
கண்பார்வை படிப்படியாக
பறிக்கப்பட்டு
பார்வையிழக்கும்போதும்
துணையாகபோவது - இந்த
தனிமைதான்-ஆனால்
அப்போது அந்த வயோதிக தனிமை நமக்குத்
தனிமையாயிராது - ஏனெனில் இருளில்
தனிமையின் கொடுமையைதான்
ஏற்கனவே நாம் அன்னையின்
அடிவயிற்றில் பல மாதங்கள் அனுபவித்துவிட்டுதானே
வந்தோம்!
Visit : http://www.sumathygsmy.in/
Comments
In Channel
























