ஒல்லாந்தரின் முதற்கட்ட முயற்சி | யாழ்ப்பாணக் கிறிஸ்தவத் திருமறைகள் | சச்சிதானந்தன் சுகிர்தராஜா
Description
யாழ்ப்பாணத்தில் பல்வேறு கிறிஸ்தவ வேத மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருக்கின்றன. இந்தியத் துணைக்கண்டத்தின் மொழிகளில் வேதப்பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்ட முதலாவது மொழி தமிழ் ஆகும். பிரிட்டிஷ் மற்றும் வெளிநாட்டு வேதாகம சங்கத்தின் (The British and Foreign Bible Society) முயற்சிகளினால் பல மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருந்தன. இப்பதிப்புகள் ‘Fabricius’ அல்லது ‘Bower’ போன்ற ஐரோப்பிய மொழிபெயர்ப்பாளர்களின் பெயரால் அறியப்பட்டிருந்தன. அதேசமயத்தில் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் சிலர், அவர்களது தனிப்பட்ட பிரயத்தனங்களினாலும் சில மொழிபெயர்ப்புகளை வெளியிட்டனர். ‘யாழ்ப்பாணக் கிறிஸ்தவத் திருமறைகள்’ எனும் இத்தொடர் இம்மொழிபெயர்ப்புகளின் பின்னால் இருந்த நபர்கள், அவர்களின் விளக்கவுரைகள் (Hermeneutical Aims), மொழிநயம், மொழிபெயர்ப்பு நடைமுறைகள், உபயோகித்த வட்டாரச் சொற்கள், பின்னணி வரலாறு போன்றனவற்றை ஆய்வு செய்கிறது; இவை எவ்வாறு வேதாகம சங்கத்தின் பிரதான பதிப்புகளிலிருந்து வேறுபட்டன என்பதையும் விவரிக்கிறது