Discover
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
Author: Solvanam சொல்வனம்
Subscribed: 7Played: 22Subscribe
Share
© Solvanam சொல்வனம்
Description
தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com
Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems
Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems
1490 Episodes
Reverse
Author interviews for Solvanamகதையை இங்கே வாசிக்கலாம்: https://solvanam.com/2025/02/23/%e0%ae%a4%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/எப்படி இந்தக் கதை உருவானது?எவ்வாறு இந்தக் குறுநாவல் வடிவம் பெற்றது?எழுத்தாளர் கணேஷ்ராம் (Ganeshram) நம்முடன் பகிர்கிறார்.
A trailer to the Quantum Computing talk in Tamil by Venkat Venkatramananகுவாண்டம் கணிப்பீடு என்றால் என்ன?குவாண்டம் பிட்ஸ் (qubits) என்றால் என்ன, மேலும் அவை எப்படி வேலை செய்கின்றன?வெங்கட வெங்கடரமணன் ஒரு இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர், கல்வியாளர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். அவர் டொராண்டோவில் உள்ள மெக்ரே இமேஜிங்கில் தலைமை அறிவியல் அதிகாரியாக உள்ளார். அவர் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் மெக்மாஸ்டர் ஸ்கூல் ஆஃப் பயோமெடிக்கல் இன்ஜினியரிங்கில் தொழில்துறை பேராசிரியராகவும், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியல் மற்றும் பொறியியலில் துணை பேராசிரியராகவும் உள்ளார். அவர் லுமென்ட்ரா இன்க் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆவார்.
தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com
Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems at Solvanam - Tamil Arts and Literature
Era Murukan's Tamil Novel Milagu - Chapter 1 :: எழுத்தாளர் இரா முருகன் எழுதும் நாவல் “மிளகு”
1st Chapter - அத்தியாயம் ஒன்று
To read: / முழுவதும் வாசிக்க: https://solvanam.com/series/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/
குரல்: சரஸ்வதி தியாகராஜன் / Voice: Saraswathi Thiagarajan
சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- கௌதம் நாராயண்- நிழல்களின் ஓலம்- உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன்.கௌதம் நாராயணன் அவர்கள் திருநெல்வேலிக்காரர். ஏறத்தாழ பத்தாண்டு காலமாக எழுத்துலகில் உள்ளார். இவர் ஆங்கிலத்தில் சோனியா என்ற ஒரு நாவலும், தமிழில் கறை என்ற நாவலும் வெளியிட்டிருக்கிறார். நிறைய இவரது சிறுகதைகள் பல்வேறு இணைய இதழ்களில் வந்து கொண்டிருக்கின்றன. . எண்ணூறு பக்கங்கள் கொண்ட இவரது நீண்ட நாவல் ஒன்று வெளிவர உள்ளது. திருநெல்வேலியின் பின்னணியில், ஒரு மழைக்கால இரவில் தொடங்கும் இந்தக் கதை, ஆட்டோ ஓட்டுநரான முத்தப்பன் என்பவரின் வாழ்வின் ஒரு பகுதியை நமக்குக் காட்டுகிறது. வெறும் ஒரு பயணத்தைப் பற்றிய கதையாகத் தொடங்கி, மெல்ல மெல்ல மனித மனதின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் வஞ்சம், இழப்பு மற்றும் கடந்த கால நிழல்கள் எழுப்பும் ஓலத்தைப் பற்றிப் பேசுகிறது. அமைதியாகத் தோன்றும் ஒரு வாழ்வின் பின்னால் எவ்வளவு பெரிய கொந்தளிப்புகள் இருக்கக்கூடும் என்பதை இக்கதை வெளிப்படுத்துகிறது.
Solvanam Madhurabharathi Nerkanal by Saraswathi Thiagarajanதிரு. மதுரபாரதி (சு. கணபதி) அவர்கள் தமிழ் இலக்கியத்திலும் பத்திரிகையியலும் இணைந்த ஒரு சிறந்த ஆளுமை. சிறுவயதிலேயே திருக்குறள் மற்றும் பாரதியார் கவிதைகள் ஊட்டிய வாசிப்பு பழக்கம், அவரை ஆழ்ந்த இலக்கியப் பயணத்திற்கு அழைத்துச் சென்றது. சிறுகதை, கவிதை, கட்டுரை, இசைப்பாடல், ஆங்கில–தமிழ் இருமொழி எழுத்து என பல வடிவங்களில் அவர் தொடர்ந்து எழுதிவந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் படுகொலை பின்னணியில் எழுதிய ‘தீ’ என்ற சிறுகதை, இலக்கியச் சிந்தனையால் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெற்றது. British Council மற்றும் The Poetry Society of India இணைந்து நடத்திய அனைத்துலகக் கவிதைப் போட்டியில் “The Making of a God” என்ற ஆங்கிலக் கவிதைக்கு இரண்டாம் பரிசு பெற்றது அவரது சர்வதேச இலக்கிய அங்கீகாரமாகும். The Hindustan Times நாளிதழில் வெளிவந்த நகைச்சுவைக் கட்டுரைகள், அவரது மொழி நயத்தையும் சமூகக் கூர்மையையும் வெளிப்படுத்துகின்றன. கல்கி மாத இதழின் இசைப்பாடல் போட்டியில் ‘இன்னும் உறங்காதே’ பாடல் முதல் பரிசு பெற்றது அவரது கலைவெளியின் மற்றொரு முக்கிய மைல்கல்லாகும். ‘மரத்தடி’, ‘அகத்தியர்’ போன்ற இணைய இலக்கிய மன்றங்களின் வழியாக உலகத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பரவலாக அறியப்பட்டவர். ‘ரமண சரிதம்’, ‘புத்தம் சரணம்’, ‘சீக்கிய மதம்’ போன்ற நூல்கள் தமிழில் மத–தத்துவ இலக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளன. இருபதாண்டுகளுக்கும் மேலாக ‘தென்றல்’ இதழின் ஆசிரியர் மற்றும் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றி, சமகாலத் தமிழ் இலக்கியத்திற்கு தொடர்ந்து வழிகாட்டி வருகிறார்தற்போது இவைகளில் தனது நேரத்தைத் தந்து வருகிறார். 1. Chief Editor, THENDRAL2. State Spiritual Coordinator, Sri Sathya Sai Seva Organizations (Tamil Nadu – South)3. Editor – Sanathana Sarathi (Tami)4. Trustee, Sri Sathya Sai Books and Publications, Tamil Nadu.
சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- (Saju)சஜு- மரணப் புன்னகை - உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்ஸஜு கிராமியக் கலை, கவிதை, ஆய்வு ஆகிய மூன்றையும்இணைத்துப் பயணிக்கும் ஒருவர்.கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி ஊரைச் சேர்ந்தவர்.பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும்,சிறுவயதிலிருந்தே கிராமியக் கலை மீது கொண்ட ஆழ்ந்த ஆர்வம்அவரை செண்டை மேளக் கலையுடன் வாழச் செய்கிறது. கவிதை மீது கொண்ட ஈர்ப்பு,“துமிதங்”, “நீரருந்தும் நதி” போன்ற கவிதைத் தொகுப்புகளாகவாசகர்களை அடைந்தது.செண்டை மேளக் கலைவாழ்க்கையை“கொட்டடிக்காரன்” என்ற நூலாக ஆவணப்படுத்தி,ஒரு கலைஞனின் வாழ்வை இலக்கியமாக மாற்றியவர் இவர்.“ஆற்றுமாடன் தம்புரான்” என்றநாட்டாரியல் ஆய்வு நூல் தனித்த கவனத்தைப் பெற்றார். இவர், தெய்வக்கலை பற்றி எழுதிய ஆய்வு நூல் “தெய்யத்தின் முகங்கள்”விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருதைப் பெற்றுத் தந்துள்ளது. மனிதர்களின் புன்னகையையும், மரணத்தின் புன்னகையையும் ஒரே சமயத்தில் சுமக்கும் ஒரு நினைவுக் களஞ்சியம் இந்தக் கதைகதையை வாசிக்க:-https://solvanam.com/2025/12/14/மரணப்-புன்னகை/
திரு. மதுரபாரதி (சு. கணபதி) அவர்கள் தமிழ் இலக்கியத்திலும் பத்திரிகையியலும் இணைந்த ஒரு சிறந்த ஆளுமை. சிறுவயதிலேயே திருக்குறள் மற்றும் பாரதியார் கவிதைகள் ஊட்டிய வாசிப்பு பழக்கம், அவரை ஆழ்ந்த இலக்கியப் பயணத்திற்கு அழைத்துச் சென்றது. சிறுகதை, கவிதை, கட்டுரை, இசைப்பாடல், ஆங்கில–தமிழ் இருமொழி எழுத்து என பல வடிவங்களில் அவர் தொடர்ந்து எழுதிவந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் படுகொலை பின்னணியில் எழுதிய ‘தீ’ என்ற சிறுகதை, இலக்கியச் சிந்தனையால் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெற்றது. British Council மற்றும் The Poetry Society of India இணைந்து நடத்திய அனைத்துலகக் கவிதைப் போட்டியில் “The Making of a God” என்ற ஆங்கிலக் கவிதைக்கு இரண்டாம் பரிசு பெற்றது அவரது சர்வதேச இலக்கிய அங்கீகாரமாகும். The Hindustan Times நாளிதழில் வெளிவந்த நகைச்சுவைக் கட்டுரைகள், அவரது மொழி நயத்தையும் சமூகக் கூர்மையையும் வெளிப்படுத்துகின்றன. கல்கி மாத இதழின் இசைப்பாடல் போட்டியில் ‘இன்னும் உறங்காதே’ பாடல் முதல் பரிசு பெற்றது அவரது கலைவெளியின் மற்றொரு முக்கிய மைல்கல்லாகும். ‘மரத்தடி’, ‘அகத்தியர்’ போன்ற இணைய இலக்கிய மன்றங்களின் வழியாக உலகத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பரவலாக அறியப்பட்டவர். ‘ரமண சரிதம்’, ‘புத்தம் சரணம்’, ‘சீக்கிய மதம்’ போன்ற நூல்கள் தமிழில் மத–தத்துவ இலக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளன. இருபதாண்டுகளுக்கும் மேலாக ‘தென்றல்’ இதழின் ஆசிரியர் மற்றும் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றி, சமகாலத் தமிழ் இலக்கியத்திற்கு தொடர்ந்து வழிகாட்டி வருகிறார்தற்போது இவைகளில் தனது நேரத்தைத் தந்து வருகிறார். 1. Chief Editor, THENDRAL2. State Spiritual Coordinator, Sri Sathya Sai Seva Organizations (Tamil Nadu – South)3. Editor – Sanathana Sarathi (Tami)4. Trustee, Sri Sathya Sai Books and Publications, Tamil Nadu.
எழுத்தாளர் அமரர் ஏ. எஸ். ராகவனின் மகளான மைதிலி நாராயணனின்புனைபெயர் ஷைலஜா. இவர்400 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 5 கட்டுரைகள் ,12 வானொலிநாடகங்கள், 3 தொலைக்காட்சி நாடகங்கள், கவிதைகள் என்று எழுதிவருவதுடன் கோலம், சமையல், பாட்டு, விளம்பரத்தில் குறும்படத்தில் பின்னணிக் குரல் கொடுப்பதுமாக மிளிர்கிறார். திருப்பாவை உபன்யாசம் செய்து வருகிறார். பாரதி விழாவின் போது நாடகத்தில் நடித்து பெங்களூரில் சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர்.அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் இவர் எழுதிய 'திக்குத் தெரியாத காட்டில்' என்னும் நாவலுக்கு முதற் பரிசு கிடைத்துள்ளது.இவற்றிற்கு மேல் ஒரு கலகலப்பான இல்லத்தரசிமதியொன்றில்லை” என்ற இந்தக் கதை,வெறும் பக்திக் கதையோ,நகர–கிராம முரண்பாட்டுக் கதையோ அல்ல.இது ஒரு சொல்லின் பொறுப்பைப் பற்றிய கதை.ஒரு இளம் வயதில் சொன்ன ஒரு வாக்கியம்,இன்னொருவரின் வாழ்வையே திசைமாற்றியிருக்கும் போதுஅந்த வாக்கியத்தைச் சொன்னவன்அதன் ஆழத்தை உணர்ந்த தருணமே இந்தக் கதை.கதையை வாசிக்க:-https://solvanam.com/2025/08/10/மதியொன்றில்லை/
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- எஸ்ஸார்சி - மனசுப் போல - சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன். எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவரது புதினம் ‘ கனவு மெய்ப்படும்’ திருப்பூர், எட்டயபுரம், மாநில வங்கி,, என் எல் சி நிறுவன விருது என நான்கு பரிசுகள் பெற்றது. ‘நெருப்புக்கு ஏது உறக்கம்.’ என்னும் புதினம் தமிழ அரசின்பரிசும் , சேலம் தாரையார் விருதும் பெற்றது.ஆங்கில இலக்கித்திலும் ஈடுபாடு உடைய இவர் ‘ரெயின் போ’ என்னும் கவிதை நூலையும், ‘பேகனும் திருவள்ளுவரும்’ ஒப்பீட்டு நூலையும் எழுதினார்.” மனசுப் போல” என்ற இவர்கதை ஒரு குடும்பப் பயணம், ** எதிர்பாராத விபத்து**, மற்றும் வீட்டுச் சாவி தொலைந்த பதற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒரு நடுத்தரக் குடும்பத்தின் யதார்த்தமான அனுபவங்களை நகைச்சுவை கலந்த நடையில் விவரிக்கிறது.நடுத்தர வர்க்கத்தின் எளிய ஆசைகளையும், மனிதத் திட்டமிடல்களுக்கு அப்பாற்பட்ட வாழ்வின் எதார்த்தத்தையும் அழகாகப் பிரதிபலிக்கிறது. பத்து ரூபாய்க்குப் பேரம் பேசுபவர்கள் நெருக்கடி நேரத்தில் தாராளம் காட்டுவது போன்ற மனித முரண்களையும், தொலைந்த சாவி மீண்டும் கிடைப்பது போன்ற விதியின் விளையாட்டையும்இக்கதை நுணுக்கமாகப் பேசுகிறது. வட்டார மணமும் கலகலப்பான நடையும் கொண்ட இப்படைப்பு, வாழ்வின் சோதனைகளுக்கு இடையில் 'அனைத்தும் நன்மையில் முடியும்' என்ற நம்பிக்கையை நமக்குத் தருகிறது
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சார்பினோ டாலி - கிருஷ்ண லீலை- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பாளர் : சரஸ்வதி தியாகராஜன். கிருஷ்ண லீலை’ — குடும்ப உறவுகள், தலைமுறை மோதல்கள், உள் விரிசல்கள், தனிமை, தன்னம்பிக்கை, மனச்சோர்வு, ஆண்மையின் அழுத்தம், சமூகப் பொறுப்புகள் போன்ற பல அடுக்குச் சிக்கல்களை அழகாக வெளிப்படுத்துகிறது.கதை முழுவதும் ஓர் தனிமனிதப் போராட்டத்தைச் சித்திரிக்கும் உளவியல் நதி போல ஓடுகிறது.கிருஷ்ணன் எனும் நண்பன் கொண்டு வரும் தத்துவ நுணுக்கங்கள் கதையின் ஓட்டத்துக்கு வித்தியாசமான ஒளியை அளிக்கின்றன.இந்த தத்துவ உரையாடல் இலக்கியத்தை மட்டுமல்ல, வாழ்வையே நம் முன் புதியப் பார்வையில் திறக்கும் என்று தோன்றுகிறது.
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பத்மகுமாரி - சிப்பிகளின் சிதறல்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி: சரஸ்வதி தியாகராஜன். எழுத்தாளர் பத்மகுமாரி நாகர்கோயிலைச் சேர்ந்தவர். இவர் கணினித் துறையில் சென்னையில் பணி புரிகிறார். எழுதுவதில் மிகவும் ஆர்வம் உள்ளதால் தனக்குக் கிடைக்கும் நேரங்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். 2023 டிசம்பர் மாத இறுதியில் இவரது சிறுகதைத் தொகுப்பு புத்தகம் "நட்சத்திரம்" வெளியாகி உள்ளது.சிப்பிகளின் சிதறல்’ கதையில் சின்னவியல், மனித உளவியல், மற்றும் சமூக விமர்சனம் மிக அழகாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.சிப்பிகளின் சிதறல்’ ஒரு சாதாரண கதை அல்ல; அது மனித வலியின் மறைபடிமங்கள், உடைந்த மனத்தின் குரல்கள், மறைந்த நினைவுகளின் நிழல்கள், சமூகவியல் சாயல்கள் ஆகியவற்றை ஒன்றாகச் சுமந்து செல்லும் ஒரு உள் பயணம்.
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- தெரிசை சிவா - உயிர்மெய்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osவடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி: சரஸ்வதி தியாகராஜன். சிவா என்ற இயற்பெயர் கொண்ட தெரிசை சிவாவின் பிறந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனம்கோப்பு ஆகும். வேதியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது துபாயில் எண்ணெய் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவர் இதற்கு முன்பு குட்டிக்கோரா, திமில் என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இசை, சினிமா என சராசரி தேடுதல்களில் ஆரம்பித்து முகநூல் மற்றும் இலக்கிய வாசகர் வட்டங்களில் முனைப்புடன் இயங்கி வருகிறார். இவரது "சடலசாந்தி" சிறுகதை வாசகர்கள் மத்தியில் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றது. அமானுஷ்யங்களையும் அறிவியலையும் அசாதாரண சம்பவங்களால் கோர்த்து எழுதியிருக்கும் "ருபினி" என்ற புதினம் இவரது முதல் புனைவு நாவலாகும். மேலும் வெளியாகி உள்ள இவரது புத்தகங்கள் தாச்சி, தகர் என்பன ஆகும். மண்சார்ந்த வட்டார வழக்கில் எழுதும் எழுத்தாளருக்குப் பரிசு கொடுக்கும் காலக்ஸி குழுமம் 2025 ஆம் ஆண்டுக்கான பாண்டியன் பொற்கிழி பரிசை தெரிசை சிவா அவர்களுக்கு அளித்துப் பெருமைப்படுத்தியது.
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பேராசிரியர் முனைவர் எம். ஏ. சுசீலா - நேர்காணல்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osகாணொளி- சரஸ்வதி தியாகராஜன். எம். ஏ. சுசீலா அவர்கள் சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், வலைப்பதிவர். முதன்மையாக பேராசிரியராகவும், பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டவர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார்மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுக்காலம் (1970- 2006) தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பனியாற்றியவர்.ஸ்தீரீ ரத்னா, பாரதீய யுவ கேந்திரா வழங்கிய சிறந்த பெண்மணி விருது'அமரர் சுஜாதா’ விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது, நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது, ஜி யூ போப் விருது, ’தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க்குரல்’ விருது, அமரர் ராஜம் கிருஷ்ணன் வாழ்நாள் நினைவு விருது விஜயா வாசகர்வட்ட விருது என பல விருதுகள் வாங்கியுள்ளார். சிறுகதைத் தொகுப்புகளாக'பருவங்கள்மாறும்', 'புதிய பிரவேசங்கள்', ‘தடை ஓட்டங்கள்', தேவந்தியும் வெளிவந்துள்ளன. யாதுமாகி, தடங்கள், அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும், நாவல்களும்இவற்றைத் தவிர நிறைய மொழிபெயர்ப்பு நூல்களும் கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார்.
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- பேராசிரியர் முனைவர் எம். ஏ. சுசீலா - நேர்காணல்- சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9osகாணொளி- சரஸ்வதி தியாகராஜன். எம். ஏ. சுசீலா அவர்கள் சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், வலைப்பதிவர். முதன்மையாக பேராசிரியராகவும், பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டவர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார்மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுக்காலம் (1970- 2006) தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பனியாற்றியவர்.ஸ்தீரீ ரத்னா, பாரதீய யுவ கேந்திரா வழங்கிய சிறந்த பெண்மணி விருது'அமரர் சுஜாதா’ விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது, நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது, ஜி யூ போப் விருது, ’தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க்குரல்’ விருது, அமரர் ராஜம் கிருஷ்ணன் வாழ்நாள் நினைவு விருது விஜயா வாசகர்வட்ட விருது என பல விருதுகள் வாங்கியுள்ளார். சிறுகதைத் தொகுப்புகளாக'பருவங்கள்மாறும்', 'புதிய பிரவேசங்கள்', ‘தடை ஓட்டங்கள்', தேவந்தியும் வெளிவந்துள்ளன. யாதுமாகி, தடங்கள், அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும், நாவல்களும்இவற்றைத் தவிர நிறைய மொழிபெயர்ப்பு நூல்களும் கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார்.
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- முனைவர் மீனாட்சி பாலகணேஷ் - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன் பிரதிலிபி இணையத்தளம் ‘கிருஷ்ணன் எனும் சிறுகுட்டன்’ எனும் ஆன்மீக இலக்கியத் தொடர், ‘இனி என்னைப் புதியஉயிராக்கி’ எனும் புதினம், தாகூாின் ‘சண்டாளிகா’, ‘சித்ரா’ எனும் இரு நாடகங்களின் மொழிபெயர்ப்பு, சொல்வனத்தில் தொடராக வந்த டால்ஸ்டாயின் ‘ "காகசஸ் மலைக்கைதி" (Caucasus Prisoner) ’ எனும் குறுநாவலின் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை மின்புத்தகங்களாக வெளியிட்டுள்ளது.மற்றும் மொழிபெயர்ப்புப் போட்டியில் பரிசு பெற்ற ‘சித்ரா’ , குவிகத்தில் “கங்கை எனது தாய்” என்ற குறும்புதினம் போன்ற படைப்புகள் இவரின் இலக்கியப் பயணத்தின் சான்றுகள். தாமரை இலைத் தண்ணீர் வாழ்க்கை!, ஸ்ரீ அரவிந்தரின் ஆக்கங்களும் கவிதைகளும் மொழிபெயர்ப்பு, பருவம் பற்றி கட்டுரைத் தொடர் எழுதியுள்ளார் “தெய்வக் குழந்தைகளைப் பாடும் பிள்ளைத்தமிழ்” என்ற காணொளித் தொடரில் அழகாகப் பாடி அருமையாக விளக்கமும் அளித்துள்ளார் .
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- சசி. -’ஊழிப் பெருவெள்ளம்’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2025/04/30/ஊழிப்-பெருவெள்ளம்/சசி என்ற புனைபெயர் கொண்ட சசிதரன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவர். இவர் சொல்வனம், ஆனந்த விகடன், வாசகசாலை மற்றும் இணைய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவர் வசிப்பது சென்னையில். இவரது ஊழிப் பெருவெள்ளம் சிறுகதை 2015 சென்னை வெள்ளத்தைப் பின்னணியாகக் கொண்டு, ஒரு குடும்பத்தின் அனுபவத்தை விவரிக்கிறது. கதை நகைச்சுவை, பதற்றம், உணர்ச்சி ஆகியவற்றை இழைத்துக் கலந்து வழங்குகிறது. உயிர் காப்பான் தோழன் என்பது ஒரு பழைய சொல் வழக்கு. ஆனால் உயிர் காக்கும் பட்டம் சான்றிதழ் என்று கதை உணர்த்துகிறது
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்-அமீரா கார்த்திக் -’தும்ரி’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2025/04/30/தும்ரி/ இயற்பெயர் கார்த்திகேயன் . ஆசிரியராக பணியாற்றுகிறார்ஆமிரா , ஆமிராபாலன் என்ற பெயர்களில் தொடர்ந்து கவிதைகள் எழுதிவருகின்றார் .இவர் எழுதிய சிறுகதைகள் சொல்வனத்தில் வெளியாகியுள்ளன. தொடர்ந்து சிறுகதைகளும் எழுதி வருகிறார். இந்தோனேஷிய கவிஞர் (Sapardi Djoko Damono) சபார்டினோ ஜோக்கோ தமனோவின் கவிதைகளை தமிழில் மொழிப் பெயர்ப்பு செய்திருக்கிறார்.) நீங்கள் எழுதிய “தும்ரி” கதை, இலக்கியம், இசை இணைந்து வெளிப்படும் காதல் உணர்வுகளின் ஆழமான பயணத்தையும், மனித உறவுகளின் சிக்கல்களையும், இசை மற்றும் இலக்கியத்தின் வழியாக மானுட அனுபவங்களை ஆராயும் ஒரு புனைகதையாக விளங்குகிறது. இந்தக் கதை, உணர்ச்சி மற்றும் கலை வெளிப்பாட்டின் கலவையாக, தனிமனித உணர்வுகளின் பல கோணங்களையும், அவை சமூக மற்றும் கலாச்சார சூழல்களுடன் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதையும் ஆராய்கிறது.
சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- M. A. சுசீலா -’முகமூடி’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2021/03/14/முகமூடி/இவரது “முகமூடி” ஒரு உணர்வுபூர்வமான மற்றும் ஆழமான சிறுகதை. இது ஒரு எளிமையான யாத்திரை அனுபவத்தின் பின்னணியில் மனித உறவுகள், எதிர்பாராத உதவி, இழப்பின் வலி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைப் பேசுகிறது. கதை, அக்கா மற்றும் அம்மு என்ற மூத்த குடிமக்கள் இருவரின் கேதார்நாத் யாத்திரைக்கான முயற்சியைச் சுற்றி நிகழ்கிறது. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், அவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் உதவும் ஒரு மர்மமான 'முகமூடி' அணிந்த மனிதரும் கதையின் மையக்கரு.இந்தக் கதை மனிதர்களை வெளித்தோற்றத்தைக் கொண்டு எடைபோடக் கூடாது என்ற செய்தியை வலியுறுத்துகிறது.என்று எனக்குத் தோன்றுகிறது. எம். ஏ. சுசீலா அவர்கள் சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், வலைப்பதிவர். முதன்மையாக பேராசிரியராகவும், பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டவர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார்மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுக்காலம் (1970- 2006) தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பனியாற்றியவர்.
சொல்வனம்- புனைவு வனம்: நிதீஷ் கிருஷ்ணா -’எஸ்கார்ட்’ - எழுத்தாளர் சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2024/12/22/எஸ்கார்ட்/நிதீஷ் கிருஷ்ணா An Angel's Story, வாசகனின் எழுத்து, காதல் எனும் கனவுவெளி', ஆகிய மூன்று நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.இவரது எஸ்கார்ட் சிறுகதையில் நிதீஷ் தினமும் இரவு பணிக்குப் பின் அலுவலக காரில் விடுதிக்குத் திரும்பும்போது, பெண் சக ஊழியர்களை முதலில் இறக்கிவிட்டு, கடைசியாக அவரை விடுவதால் தாமதமாகிறது. இதைப் பற்றிப் பொறுப்பாளரிடம் புகார் செய்தபோது, பெண்களின் பாதுகாப்புக்காக இந்த ஏற்பாடு என்ற பதிலே கிடைத்தது. ஆனாலும் சில நாட்களுக்குப் பின், நிதீஷுக்கு இரண்டு இடங்களில் மட்டும் நிறுத்தும் சிறப்பு ஏற்பாடு கிடைத்தது. அன்று, அவருடன் ஒரு பெண் மட்டுமே பயணித்தாள். பயணத்தில், டிரைவர் ஒரு விபத்தை நினைவுகூர்ந்தார்—அதே காரில் முன்பு ஒரு விபத்து நடந்ததாகவும், அந்தப் பெண்தான் பின்னர் மீண்டும் அவருடன் பயணிக்கத் துணிந்ததாகவும் கூறினார். இரவில் ஒதுங்கிய பகுதியில் அந்தப் பெண்ணை இறக்கிவிட்டபோது, நிதீஷுக்கு பயமாக இருந்தது. ஆனால் டிரைவர் அமைதியாக, நாள்தோறும் நான் அவளுக்கு எஸ்கார்ட்தான் என்று சொல்லி, பாதுகாப்பான வாழ்வின் நிழலில் ஒரு கணம் நிற்கச் செய்தார். புறத்தே தோன்றாத பயங்களும், பாதுகாப்பின் அர்த்தங்களும் வாழ்க்கையில் எப்படி ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பதை இக்கதை வெளிப்படுத்துகிறது.
Solvanam.com புனைவு வனம்: சோழன் எழுதிய ’தருணங்கள்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2024/12/22/தருணங்கள்/சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'தருணங்கள்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: சோழன் உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன்எழுத்தாளர் சோழன்- சிறு முன்னுரை சோழன்சொந்த ஊர் தஞ்சாவூர். இயற்பெயர் ராஜ ராஜ சோழன். இவர் தஞ்சாவூரில் பள்ளியில் கணிப்பொறி அறிவியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். பூபாளம், நடுகல், சொல்வனம், மயிர் மற்றும் காற்றுவெளி இணைய இதழ்களில் கவிதைகள் வெளிவந்துள்ளன. சொல்வனம், மயிர் மற்றும் சிறுகதைகள்.காம் இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இவரது தருணங்கள் கதை நம் தினசரி வாழ்வில் கவனிக்காமல் போவதை கவனமாக ரசிக்க வைக்கும். நம்மை சுற்றி நிகழும் இயற்கையும் மனித உறவுகளும் எவ்வளவு சுகமானவையென உணர வைக்கும் மென்மையான மற்றும் உள்ளுணர்வோடு கூடிய கதை இது. இய்ற்கையின் சத்தங்கள் அனைத்தும் பாடலாக அதன் மூலம் இன்னிசையாக உணரப்படுகிறது!







