DiscoverTamil Bharathi kavithaigal பாரதி கவிதைகள்nenju porukkuthilaye நெஞ்சு பொறுக்கு திலையே! -பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
nenju porukkuthilaye நெஞ்சு பொறுக்கு திலையே! -பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

nenju porukkuthilaye நெஞ்சு பொறுக்கு திலையே! -பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

Update: 2017-08-314
Share

Description

தலைப்பு:
பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

கவிதை:
நொண்டிச் சிந்து

நெஞ்சு பொறுக்கு திலையே!-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார்-மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு)

மந்திர வாதி என்பார்-சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்,
யந்திர சூனி யங்கள்-இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே-ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்;
அந்த அரசியலை-இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு)

சிப்பாயைக் கண்டு அஞ்சுவார்-ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்,
துப்பாக்கி கொண்டு ஒருவன்-வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்,
அப்பால் எவனோ செல்வான்-அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற் பார்,
எப்போதும் கைகட்டு வார்-இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்,
கொஞ்சமோ பிரிவினைகள்?-ஒரு
கோடிஎன் றால் அது பெரிதா மோ?
ஐந்துதலைப் பாம்பென் பான்-அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட் டால்
நெஞ்சு பிரிந்திடுவார்-பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப் பார்.(நெஞ்சு)

சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும்-ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்,
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்;
ஆத்திரங் கொண்டே இவன் சைவன்-இவன்
அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)

நெஞ்சு பொறுக்கு திலையே-இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்கு திலையே,
கஞ்சி குடிப்பதற் கிலார்-அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமி லார்
பஞ்சமோ பஞ்சம் என்றே-நிதம்
பரிதவித் தேஉயிர் துடிதுடித்துத் தே
துஞ்சி மடிகின் றாரே-இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.(நெஞ்சு)

எண்ணிலா நோயுடையார்-இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தை கள்போல்-பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள் வார்,
நண்ணிய பெருங்கலைகள்-பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின் ற
புண்ணிய நாட்டினி லே-இவர்
பொறியற்ற விலங்குகள் போலவாழ் வார்.(நெஞ்சு)
Comments 
loading
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

nenju porukkuthilaye நெஞ்சு பொறுக்கு திலையே! -பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

nenju porukkuthilaye நெஞ்சு பொறுக்கு திலையே! -பாரத ஜனங்களின் தற்கால நிலைமை