வேதாரண்யம், கோடியக்கரையில் வன்கொடுமை தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது வன்கொடுமை வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேதாரண்யத்தில் சாலைமறியல்நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை, அண்ணாநகரில் கந்தசாமி வயது 25 என்ற மாற்றுத்திரனாளி வசித்துவருகிறார். இவருக்கு மாற்றுத்திரனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட மூன்று சக்கர வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த மாண்புமிகு முதலமைச்சர் படம் மழையால் கிழிந்துவிட்ட நிலையில், ஏன் முதலமைச்சர் படம் ஒட்டவில்லை என்று கேட்டு முன்னாள் ஊராட்சி உறுப்பினர் கே.பி.லட்சுமனன் 26.08.25 அன்று கடுமையாக தாக்கியுள்ளார். இதனை கந்தசாமியின் தந்தை மணியன் குடும்பத்தினர் கோடியக்கரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.சுப்பிரமணியனியத்திடம் சென்று முறையிட்டனர். இந்த நிலையில் பட்டியலினத்தைச் சார்ந்த இவர்கள் எங்களை கேள்வி கேட்பதா என்ற கோபத்தோடு, 26.08.25 அன்று இரவு பத்து மணியளவில் முன்னாள் ஊராட்சி உறுப்பினர் இராஜேஸ்வரி இராஜேந்திரன் வீட்டில் புகுந்த பத்திற்கும் மேற்பட்டோர் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலுக்கான ஏற்பாடாடுகளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.சுப்பிரமணியன் செய்ததாக கூறுகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான கந்தசாமி, ராஜேந்திரன் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை 27.08.25 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சென்று பார்த்து ஆறுதல் கூறினர். பின்னர் வேதாரண்யம் காவல்நிலையம் சென்று விசாரணை செய்ததற்கு, சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யாததது தெரியவந்தது. சம்மந்தப்பட்ட காவல்நிலைய பொறுப்பு அலுவலரிடம், கோடியக்கரை தலித் மக்கள் மீது தாக்குதல் நடந்ததற்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இயக்கம் நடத்தப்படும் என்று தீண்டாமை ஒழிப்பு தெரிவித்தும், கைது மற்றும் வழக்கு பதிவு செய்யாததைக் கண்டித்து, உடன் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஜனநாயக மாதர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ( 29.08.25 ) வேதாரண்யம் கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகிகள் அ.தி.அன்பழகன், ஏ.ராஜா, பி.சுபாஷ் சந்திரபோஸ், சிவகுமார், ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் டி.லதா, எஸ்.சுவதேவி,, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சித்தார்த்தன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேணு, இந்திய தொழிற்சங்கமைய மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.இராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதாரண்யம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி, வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.அம்பிகாபதி, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.வெற்றியழகன், ஒன்றிய நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.பின்னர் வேதாரண்யம் வட்டாட்சியர் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்து இன்று மாலைக்குள் சம்மந்தப்பட்ட நபர்கள்மீது வன்கொடுமை சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.#TNUEF #களத்தில்_கம்யூனிஸ்ட்கள் #VCK.
வெற்றிகரமாக பதிவு செய்த சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தின் வீர வரலாற்றையும், அதற்க்கு பக்கபலமாக அவதூறு செய்த இணைய உபி நண்பர்களுக்கு நன்றி கூறும் தருனமாக space-யில் பேசியதை !!! தொகுத்து ஒரு வீடியோ & ஆடியோ வடிவில் வெளி இடுகிறோம். முடிந்தவரை அவதுறுகளுக்கு விளக்கம் கொடுத்து உள்ளோம் !!
தங்கலான் திரைப்படத்தின் மறைந்திருந்த எல்லா விடயங்களை பேசி, ஒரு பலதரமான விவாதங்களை முன்னெடுக்கிறோம். கேட்டு மகிழுங்கள்.
அரசியல் என்பது டிஜிட்டல் தளத்தில் எப்படி மருவி இருக்கிறது ? எப்படி இயங்குறது என்பதை யாதர்த்தமாக பேசி உள்ளோம். கேட்டு மகிழுங்கள்
பெரியாரின் அரசியல் பயணம் , அவருக்கு பின் வந்த இயக்கம் மற்றும் அரசியல் செயல்பாடுகளை திட்டமிட்டு மறைத்து பேசும் போக்கு இருக்கிறது. தமிழக மக்களின் நலனாக உருவாக்கிவர் தான் பெரியார். அவர் விட்டுவிட்டு போன கடமைகளை அவர் தோளில் நின்று பயணிப்போம்.
எதோ ஒரு சாதாரண திரைப்படமாக இல்லாமல் , அது பேச வேண்டிய அரசியல் மற்றும் சமூக சூழ்நிலைகளை ஜாலியா பேசி இருக்கோம்
சட்டநாதன் தலைமையில் ஒரு கமிட்டியை அப்போதைய முதல்வர் கருணாநிதி நியமித்தார், அதன் 1970 அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள்ளே சில சொத்து (நிலம், சமூக பொருளாதாரம் ) வாய்ந்த சில சாதியினரை இடஒதுக்கீட்டின் பெரும் பலன்களைப் பெற்று, உண்மையான பிற்படுத்தப்பட்டோரின் வளர்ச்சியைத் தடுப்பதாக கண்டறிந்தார். ஆதனால் இட ஒதுக்கீடு சதவிகிதத்தை அதிகரிக்கவும், தனியாக ‘மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ பிரிவை அடையாளம் காணவும், இடஒதுக்கீட்டின் பலன்களை சில சாதிகளிடம் மட்டும் குவிவதை தடுக்க பொருளாதார அளவுகோல்களை அறிமுகப்படுத்த அவ்வாணையம் பரிந்துரைத்தது. ஆனால் கிரீமி-லேயர் குறித்த பரிந்துரையை திமுக அரசு புறக்கணித்தது. இடஒதுக்கீடு பலன்களில் இருந்து எந்த சாதியும் விலக்கப்படவில்லை (புரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டன), மேலும் ‘மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’என்ற தனிப் பிரிவும் வரையறுக்கப்படவில்லை. மாறாக 1971 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு 25% லிருந்து 31% ஆகவும், SC மற்றும் ST களுக்கு 16% லிருந்து 18% ஆகவும் உயர்த்தப்பட்டது. நண்பர்களே, 1979-ல் திமுக பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கோரியதற்கான ஆதாரத்தை இத்துடன் நான் இணைக்கிறேன். நெஞ்சுக்கு நீதி என்ற தனது புத்தகத்தில் கருணாநிதி அவர்களே எழுதிய வார்த்தைகள் பின்வருமாறு "அன்றைய தினம் சென்னையிலே கூடிய கழகப் பொதுக்குழுவிலே அ.தி.மு.க. அரசு பிறப்பித்த அபாயகரமான உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டு மென்றும், பொருளாதார அடிப்படையில் தாழ்ந்து கிடக்கின்ற ஏழைக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு, அவர்கள் பிற்படுத்தப்பட்டவர் களானாலும், தாழ்த்தப்பட்டவர்களானாலும், முன்னேறிய வகுப்பினரானாலும் அவர்களுக்கு பொது இட ஒதுக்கீட்டிலிருந்து குறிப்பிட்ட சாரத்தை ஒதுக்குவதற்கான வேறு ஏற்பாடுகளை செய்யச் வேண்டு மென்றும் தீர்மானம் நிறைவேற்றினோம்." 1979ல் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை திமுக ஆதரித்த சம்பவத்தைப் பல பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன, 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த செய்தி கட்டுரைகள் / இணைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
Political Critic Tamil Podcast. #MircoPolitics #12HRS Working Time #Hindutva #Islamophobia Host By #CringeMama With #Hammurabi
சென்னையில் ஒரு வீடு !!! ஏதோ இது தனி மனிதர் பிரச்சனை மாதரி , உழைச்சி வீடு வாங்கிலாம் என்று நினைத்து ஓடும் மக்களின் கதையை, கேட்க யாருமியில்லை என்ற தனத்தில் புலம்பி. இந்த அரசிடம் கோரிக்கையை சமர்ப்பிக்கிறோம். Discussion With Kuthoosi & Hammurabi. Host By CringeMama
பெண்ணியமா? சாதாரன சினிமாவில் ஆளாளுக்கு ஒரு கருத்து வருமே அதைப்போல, ஒவ்வொருவருக்கும் பெண்ணியம் பற்றிய தவறான புரிதல் இருக்கிறது. பெண்ணியத்தில் பலவகை இருக்குங்க அமேசான் பெண்ணியம் separatist பெண்ணியம் சுற்றுச்சூழல் பெண்ணியம் தாராளவாத பெண்ணியம், பொருள் முதல்வாத பெண்ணியம், தீவிரவாத பெண்ணியம் இவையெல்லாம் என்ன? இவைகளில் இருந்தெல்லாம் எப்படி மார்க்சியம் பேசும் பெண்ணியம் வேறுபடுகிறது? இதை நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். Participant : CringeMama , Toru Kazma from #Boomer Talks , Lucy from #Alpha Podcast ஜாலிய கேட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க !!!
Nam yen Anime Lover ra irukkoom enpathai jolly ya pesi irukkoom , kelunga makkale....
இந்தியாவில் OFFICE என்ற அமைப்பு எப்படி இருக்கிறது, தொழிலார்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறார்கள், உளவியல் ரீதியாக சமுக பண்பாடு எவ்வாறு OFFICE அமைப்பை தாக்குகிறது என்பதை எல்லாம் ஜாலியாக பேச முயற்சி செய்துள்ளோம். Enjoy The Episode
யார் இந்த பெரியார் ? ஏன் என்றோ இறந்தவரை இன்றும் இணையத்தில் கொண்டாடப்படுகிறார், என்பதை அவரின் பிறந்தநாளில் "சமூகநீதி நாளாக " கொண்டபடும் நிகழ்வை நண்பர்களுடன் இனைந்து உரையாடியுளோம். #சமூகநீதி என்னும் ஜனநாயகத்தை கொண்டாடுவோம்.
அரசியலில் அமைப்பு , இயக்கம், கட்சி எவ்வாறு மக்களுக்காக இயங்குகிறது, மற்றும் தமிழத்தில் சமகால அரசியலில் மக்களின் பங்கு மற்றும் விழிப்புணர்வு குறித்து நண்பர்களுடன் உரையாடிய நிகழ்வை ஓர் AUDIO PODCAST ஆக சமர்ப்பிக்கிறோம். Let Enjoy the Conversation
இவ்வளவு நாளும் ‘தான் ஒரு நிரபராதி’ என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களையெல்லாம் இந்நாடகம் கேள்விக்குள்ளாக்குகிறது. நிரபராதி என்று அகராதிகள் சொல்லும் அர்த்தங்களையெல்லாம் அழித்துவிட்டு அதற்குப் புதிய விளக்கம் தருகிறது. இந்த நாடகத்தை வாசிக்கும் ஒவ்வொரு நிரபராதியையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவிட்டு, ‘ஒரு குற்றம் நடக்க வேண்டும் என்று மனதால் விரும்பி, அதில் நேரடியாக எந்தப் பங்கும் கொள்ளாத ஒருவன் குற்றவாளியா, இல்லையா?’ என்று மிக நிதானமாகக் கேட்கிறது.
Discussed about lies with #Rogered, and Explore their dimensions / how impact our lifestyle. #Enjoy_The_Lies
நரிகள் என்பவை யார் ? நரிகள் என்னயென செய்துயுள்ளது.. நரிகள் சுட்ட வடை கதை என்பது காகம் இழந்த வடையின் கதை என்பறிக.