DiscoverAtmanandalahari
Atmanandalahari
Claim Ownership

Atmanandalahari

Author: atmanandalahari

Subscribed: 0Played: 0
Share

Description

Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad Gita, Brahma Sutra and Prakarana Granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood. This will be a multilingual podcast with episodes in English, Tamil and Sanskrit.
எங்கும் நிறைந்த இருப்பாய், மங்காத சித்தாய் பொங்கும் ஆநந்த பொலிவான மெய்ப்பொருளை, ஆத்மாவை, தங்கு தடையில்லா தத்துவத்தை, இரண்டற்ற ஒன்றான அத்வைத கருத்துக்களை இந்த வலையொலிப் பதிவில் பகிர்ந்துகொள்வோம். உபநிடதங்கள், பகவத் கீதை, ப்ரம்மசூத்ர கருத்துக்களையும், வேதாந்த நூல்களையும் ஆராய்வோம். வாழையடி வாழையாய் வந்த இந்த அறிவொளியில், அறியாமை இருள் அகலட்டும். இந்த வலையொலி ஆங்கிலம், தமிழ், மற்றும் வடமொழியில் ஒலிக்கும் .

28 Episodes
Reverse
In Sanātana Dharma, there are 18 great Mahāpurāṇas — and among them, the Śrīmad Bhāgavatam shines as the most beloved. The Purāṇas use personification, magnification, and deep symbolism to make timeless truths come alive. Beneath the captivating stories lies the ultimate purpose: guiding us toward the One Reality. In this episode, we explore the Śrīmad Bhāgavatam through the lens of Advaita Vedānta, uncovering the hidden meanings and spiritual insights behind its symbolism. This episode is rendered in English, with select verses in Tamil and Sanskrit.
ஈன மிகுத்துள பிறவி-இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். இறையருள் எங்கும் காற்று போல் பரவியிருக்கிறது. வாழ்க்கைப் படகை காற்று வீசும் திசையில் திருப்புவதே சுய முயற்சி. இறையருளும் சுய முயற்சியும் நாணயத்தின் இருபக்கங்கள் போல் அமைந்து வாழ்க்கையை வழிநடத்த வேண்டும். இவற்றுடன் குருவருள், சாஸ்த்திர அருளும்  இணைய  பயணம் இனிதே அமையும் 
உலக பசு பாசம் இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ள நான்கு தகுதிகள் (சாதன சதுஷ்டயம்) சொல்லப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு  1. விவேகம்  2. வைராக்யம்  3. சமா ஆதி ஷட்சம்பத்தி (சமா,தமா, திதிக்ஷா, உபரதி, ஸ்ரத்தா, சமாதானம்) 4. முமுக்ஷுத்வம்   
அற்றைக்கு இரை தேடி இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். அறம், பொருள், இன்பம், வீடு ( தர்மம்  அர்த்தம்  காமம் மோட்சம்) இவை நான்குமே புருஷார்த்தம் எனப்படும். இவற்றில் அறத்துடன் பொருளை ஈட்டி , இன்பத்தை நுகரும் மனிதன், ஒரு காலகட்டத்தில் இது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோள் இல்லை. இதற்கு மேல் ஏதோ ஒன்று உள்ளது என்று உணரும் போது அவன் வீடு பேறு அல்லது மோட்சத்திற்கு தயாராகிறான். 
Thiruppugazhil Vedantam -1  இறை வணக்கம் - கைத்தல நிறைகனி இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். தடைகளை நீக்கும் விநாயகரை வணங்கி நமது வேதாந்த பயணத்தை மேற்கொள்வோம். அத்யாத்ம, அதிபூத, அதிதெய்வ தடைகள் விலகி, சகுண உபாஸனம் மூலம் பக்தியை வளர்த்து, நிர்குண பரப்பிரம்மத்தை உணர்ந்து கொள்வோம்.
Ulladhu Narpadhu is a collection of forty verses by Bhagavan Sri Ramana revealing the ultimate truth. Poems that blossomed based on this text are shared here. The three poems based verses 1, 3 and 39 will describe the Mahavakya Tat Tvam Asi. This episode will have rendering of verses from Ulladhu Narpadhu in Tamil, Saddarshanam in Sanskrit and poems in English  https://www.amazon.com/Chinmaya-Chintamani-Consciousness-Dr-Varalakshmi-Niranjan/dp/B0CHGHWW2C
ஈஸ்வரன்  ஜீவா  சுத்த சத்வம்  மலின சத்வம்  மாயா - காரண சரீரம்  அவித்யா - காரண சரீரம்  மாயா -ஆனந்த மய கோசம்  அழுக்கு - மோகம் - ஆனந்த மய கோசம் 
உலகம் எப்படி உருவானது? சத்வ ரஐஸ் தமோ குண வெளிப்பாடு  ஈஸ்வரன் - சத்வ குண பிரதிபிம்ப சைதன்யம், அந்தர்யாமி, அஸங்கத்வம், நிமித்த காரணம்  ஜீவகோடி- ரஜோ குண பிரதிபிம்ப சைதன்யம்  மாயை என்பதே மாயை  நடக்காததை நடந்தது போல் காட்டும்  இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும்  கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும்   இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும்  ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும்  இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும்  ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும்             
The Adyāropa Apavāda method of explained with examples like- Seeing snake in rope/ Seeing man in post/ Seeing mirage/ Seeing blueness in sky. The truth that is with a name or form, the one that is same, the one without second, sentience, light that is full without any blemishes. The difference between Brahman and Maya is highlighted and the manifestation of  cosmos is discussed. Brahman Maya Satyam Mithya  Nirvikara Savikara Nirguna Saguna Chetanam Jadam samam Vishamam Aparinami Parinami          
மரக்கிளை நிலவு நியாயம் , அருந்ததி தர்சன நியாயம் - தெரிந்ததைக் கொண்டு தெரியாததைக் காட்டுதல். அத்தியாரோபம்/ அபவாதம் யுக்தி மூலம் பிரம்மன் சத்தியம் உலகம் மித்யா என்று விளக்குதல்  கயிறு பாம்பாகத் தெரிதல், கட்டை மனிதனாகத் தெரிதல், கானல் நீராகத் தெரிதல், வானம் நிறமுடையதாகவும் நிலமுடையதாகவும் தெரிதல் போன்ற உதாரணங்களை சொல்லி குரு விளக்குகிறார்.
அறிவதும் அறியப்படுவதும் எப்பொழுதும் வேறு வேறானதே.  தேஹம் வேறு  - தேஹி வேறு  என்ற அறிவு . உடலில் இருந்து உடலை இயக்குவது எதுவோ அது உடலுக்கு வேறானது (ஸூக்ஷ்ம சரீரம்). சூக்ஷ்ம உடலும் இயங்கக் காரணமானது எதுவோ அது அதற்கும் வேறானது (ஆத்மா). தூல உடல், சூக்கும உடல் இரண்டுக்கும் காரணமான காரண உடல், என மூன்று உடல்கள் உள்ளன. இவை மூன்றிற்கும் வேராக உள்ளது ஆத்மா. இதை உணர்த்த நாள் தோறும் அனுபவிக்கும் மூன்று அவஸ்தை நிலைகளை உதாரணமாக விளக்குகிறார்.  விழிப்பு நிலை, கனவு நிலை,  உறக்க நிலை இதை உடலுக்கு வேறாக ஒருவன் இருக்கிறான் என்பதாலேயே உணரமுடிகிறது 
சூழல் காற்றில் சுற்றும் குப்பை போல திரியும் ஜீவன்  குருவை சரணடைகிறான் . ஆத்ம ஞாநம் கற்று கொள்ள வேண்டிய தகுதிகளுடன்  -தவம் , பக்தி, கேட்க ஆசை, ஸ்ரத்தாவுடன் அவன் கேட்கிறான்.  ஆத்ம வித்தை கேட்க ஆரம்பித்தாலே சம்சாரக் கடல் வற்ற தொடங்கிவிடும்.புழு எப்படி குளவியாய் மாறுகிறதோ அது போல் ஜீவா பரமாத்மாவாகிறான். 
சிஷ்யன் குருவை வணங்கி ஆத்ம ஞானம் வேண்டும் என்று கேட்டல்,  குரு சங்கல்ப தீக்ஷை, சக்ஷு தீக்ஷை, ஸ்பர்ச தீக்ஷை, ஞானதீக்ஷை மூலம் ஆறுதல் அளித்தல், சிஷ்யன் தகுதியை உணர்த்தி  குருவை சரணடைதல். 
நான்கு தகுதிகள் உடையவருக்கு அறிவு உண்டாகும். சிஷ்யனுக்கு உரிய தகுதிகளுடன், அத்யாத்மிக ஆதிதைவிக ஆதிபௌதிக துன்பங்களில் இருந்து விடுபட குருவை அணுகுதல். 
தத்துவ விளக்கப் படலம்  பாடல் 1-3 ஞானம் பெறுவதற்கான தகுதிகள் -விவேகம், வைராக்யம் , சமதம ஆறு கூட்டம், முக்தி அடைய அவா. 
கைவல்ய நவநீதம் நூலினால் என்ன பயன்?  பாயிரம் 6 படர்ந்தவே தாந்த மென்னும் பாற்கடல் மொண்டு முன்னூல், குடங்களில் நிறைத்து வைத்தார் குரவர்க ளெல்லாங் காய்ச்சிக், கடைந்தெடுத்து அளித்தேன் இந்தக் கைவல்ய நவநீதத்தை, அடைந்தவர் விடய மண்தின்று அலைவரோ பசியி லாரே.  
என்னுடை மனது புத்தி இந்திரிய சரீரம் எல்லாம், என்னுடை அறிவி னாலே இரவிமுன் இமமே ஆக்கி,  என்னுடை நீயும் நானும் ஏகமென்று ஐக்கியம் செய்ய, என்னுடைக் குருவாய்த் தோன்றும் ஈசனை இறைஞ்சி னேனே. Maha Vakya - Tat Tvam Asi is explained in this verse
பாடல் -2 & 3 சகுண ஈஸ்வர உபாசனை  குரு நமஸ்காரம்  
மோட்சம் என்றால் என்ன? கர்மா, பக்தி, ஞாநம் -விளக்கம்  பாயிரம்-1 பொன்னிலம்  மாதர்  ஆசை பொருந்தினர் பொருந்தார்  உள்ளந்    தன்னில் அந்தரத்தில் சீவசாட்சி மாத்திரமாய் நிற்கும்,  எந்நிலங்களிலும்  மிக்க எழு நிலம்  அவற்றின் மேலாம்,  நன்னிலம்  மருவும் ஏக நாயகன் பதங்கள் போற்றி!  
கைவல்ய நவநீதம் -குரு வந்தனம் முன்னுரை இது ஒரு சார்பு நூல். சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதை இன்னொரு நூலாக எழுதுவது.  எழதியது - தாண்டவராய சுவாமிகள். மனிதப் பிறவியின் நோக்கம் உண்மையை உணர்தல். நான் யார் என்ற  உண்மையை உணரவேண்டும். எல்லாம் பிரம்மமே என்று அறிவதே அறிவு. 
loading
Comments