கைவல்ய நவநீதம் -10
Update: 2025-09-11
Description
பாடல் :14
என்னைத்தான் சடனா உள்ளத் தெண்ணியோ சொன்னீர் ஐயா,
தன்னைத்தான் அறியா மாந்தர் தரணியில் ஒருவர் உண்டோ,
பின்னைத்தான் அவர்கள் எல்லாம் பிறந்திறந் துழலு வானேன்,
நின்னைத்தான் நம்பி னேற்கு நிண்ணயம் அருளு வீரே.
பாடல் :15
இன்னது தேகம் தேகி இவன் என உணர்வான் யாவன்,
அன்னவன் தன்னைத் தான் என் றறிந்தவன் ஆகும் என்றார்,
சொன்னபின் தேகி யார்இத் தூலம் அல்லாமல் என்றான்,
பின்னது கேட்ட ஐயர் பீழையும் நகையும் கொண்டார்.
பாடல் :16
தேகம் அல்லாமல் வேறே தேகியார் காணேன் என்றாய்,
மோகமாம் கனவில் வந்து முளைத்தவன் எவன்நீ சொல்வாய்,
சோகமாம் கனவு தோன்றாச் சுழுத்திகண் டவன் ஆர் சொல்வாய்,
ஆகநீ நனவில் எண்ணும் அறிவு தான் ஏது சொல்வாய்.
என்னைத்தான் சடனா உள்ளத் தெண்ணியோ சொன்னீர் ஐயா,
தன்னைத்தான் அறியா மாந்தர் தரணியில் ஒருவர் உண்டோ,
பின்னைத்தான் அவர்கள் எல்லாம் பிறந்திறந் துழலு வானேன்,
நின்னைத்தான் நம்பி னேற்கு நிண்ணயம் அருளு வீரே.
பாடல் :15
இன்னது தேகம் தேகி இவன் என உணர்வான் யாவன்,
அன்னவன் தன்னைத் தான் என் றறிந்தவன் ஆகும் என்றார்,
சொன்னபின் தேகி யார்இத் தூலம் அல்லாமல் என்றான்,
பின்னது கேட்ட ஐயர் பீழையும் நகையும் கொண்டார்.
பாடல் :16
தேகம் அல்லாமல் வேறே தேகியார் காணேன் என்றாய்,
மோகமாம் கனவில் வந்து முளைத்தவன் எவன்நீ சொல்வாய்,
சோகமாம் கனவு தோன்றாச் சுழுத்திகண் டவன் ஆர் சொல்வாய்,
ஆகநீ நனவில் எண்ணும் அறிவு தான் ஏது சொல்வாய்.
Comments
In Channel