கைவல்ய நவநீதம் -14
Update: 2025-11-03
Description
பாடல் :27
அழுக்கொடு பற்றும் சீவர்க்கு அதுவே ஆநந்த கோசம்,
சுழுத்தி காரணசரீரம் சொன்னதிம் மட்டும் மோகம்,
முழுக்குணத் திரண்டால் வந்த மூலவா ரோபம் சொன்னோம்,
வழுத்துசூக் குமவா ரோப வழியும்நீ மொழியக் கேளாய்.
பாடல் : 28
ஏமமா யாவி னோத ஈசனார் அருளி னாலே,
பூமலி உயிர்கட் கெல்லாம் போகசா தனம்உண் டாகத்,
தாமத குணம்இ ரண்டு சக்தியாய்ப் பிரிந்து தோன்றும்,
வீமம் ஆம் மூடல் என்றும் விவிதமாம் தோற்றம் என்றும்.
பாடல் :29
தோற்றம் ஆம் சத்தி தன்னின் சொல்லிய விண்ணாம் விண்ணின்,
காற்றதாம் காற்றின் தீயாம் கனலில் நீர்நீரின் மண்ணாம்,
போற்றும் இவ்வைந்தும் நொய்ய பூதங்கள் என்று பேராம்,
சாற்றுமற் றிவற்றின் போக சாதன தனுஉண் டாகும்.
பாடல்:30
ஆதிமுக் குணமிப் பூதம் அடங்கலும் தொடர்ந்து நிற்கும்,
கோதில்வெண் குணத்தி லைந்து கூறுணர் கருவி யாகும்,
ஓதிய பின்னை ஐந்தும் உளம்புத்தி இரண்டா ஞான,
சாதனமாம் இவ் வேழும் சற்குணப் பிரிவி னாலே.
அழுக்கொடு பற்றும் சீவர்க்கு அதுவே ஆநந்த கோசம்,
சுழுத்தி காரணசரீரம் சொன்னதிம் மட்டும் மோகம்,
முழுக்குணத் திரண்டால் வந்த மூலவா ரோபம் சொன்னோம்,
வழுத்துசூக் குமவா ரோப வழியும்நீ மொழியக் கேளாய்.
பாடல் : 28
ஏமமா யாவி னோத ஈசனார் அருளி னாலே,
பூமலி உயிர்கட் கெல்லாம் போகசா தனம்உண் டாகத்,
தாமத குணம்இ ரண்டு சக்தியாய்ப் பிரிந்து தோன்றும்,
வீமம் ஆம் மூடல் என்றும் விவிதமாம் தோற்றம் என்றும்.
பாடல் :29
தோற்றம் ஆம் சத்தி தன்னின் சொல்லிய விண்ணாம் விண்ணின்,
காற்றதாம் காற்றின் தீயாம் கனலில் நீர்நீரின் மண்ணாம்,
போற்றும் இவ்வைந்தும் நொய்ய பூதங்கள் என்று பேராம்,
சாற்றுமற் றிவற்றின் போக சாதன தனுஉண் டாகும்.
பாடல்:30
ஆதிமுக் குணமிப் பூதம் அடங்கலும் தொடர்ந்து நிற்கும்,
கோதில்வெண் குணத்தி லைந்து கூறுணர் கருவி யாகும்,
ஓதிய பின்னை ஐந்தும் உளம்புத்தி இரண்டா ஞான,
சாதனமாம் இவ் வேழும் சற்குணப் பிரிவி னாலே.
Comments
In Channel





